districts

img

தூத்துக்குடி மாநகரில் கனிமொழி எம்.பி., பொதுமக்களுக்கு நன்றி தெரிவிப்பு

தூத்துக்குடி, ஜூன் 13 - மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள கனிமொழி எம்.பி. தூத்துக்குடி மாநகரில் வீதி வீதியாகச் சென்று பொதுமக்களுக்கு நன்றி தெரி வித்தார்.

மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் தூத்துக்குடி தொகுதி யில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட கனிமொழி 5,40,729 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மேலும் அவர், நாடாளுமன்ற குழுத் தலைவராக நிய மனம் செய்யப்பட்டுள்ளார். இதை யடுத்து, தூத்துக்குடி தொகுதி மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிப்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம்  புதன்கிழமை தூத்துக்குடி வந்தார்.

அவருக்கு வடக்கு மாவட்ட திமுக செயலரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான பெ.கீதாஜீவன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மாலையில், அவர், கருணாநிதியின் படத்துக்கு மலர்  தூவி மரியாதை செலுத்தினார். தொட ர்ந்து, வடக்கு மாவட்ட திமுக அலுவலக மான கலைஞர் அரங்கில் இருந்து திறந்த வெளி வாகனத்தில் மாநகர் பகுதிகளின் முக்கிய வீதிகளில் சென்று பொதுமக்க ளுக்கு நன்றி தெரிவித்தார்.  இதில், சட்டப் பேரவை உறுப்பினர்கள் ஊர்வசி அமிர்த ராஜ், எம்.சி. சண்முகையா, மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் இந்தியா கூட்டணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கனிமொழி எம்.பி.க்கு சிபிஎம் வாழ்த்து

தூத்துக்குடி கலைஞர் அரங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட குழு சார்பில் மாவட்டச் செயலாளர் கே.பி.ஆறுமுகம் தலைமையில், தூத்துக்குடி நாடாளுமன்ற  தொகுதியில் வெற்றி பெற்றுள்ள இந்தியா கூட்டணியின் திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதியை நேரில் சந்தித்து, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.எஸ்.அர்ஜுனன், தா.ராஜா, பா.புவிராஜ், மாநகரச் செயலாளர் எம்.எஸ்.முத்து, ஒன்றியச் செயலாளர் கே.சங்கரன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சொ.மாரியப்பன், சுரேஷ், விவசாயிகள் சங்க த.சீனிவாசன், சமூக நலன், மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, இந்தியா கூட்டணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.