திருவாரூர், மே 12 - பாஜக உட்கட்சி பூசல் காரண மாக, கூலிப்படையை கொண்டு அக்கட்சியின் விவசாய அணி முன்னாள் மாவட்ட நிர்வாகி மது சூதனனை கொலை செய்ய முயன்ற பாஜக மாவட்டச் செயலாளர் பாஸ்கர் சனிக்கிழமை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஓகை அருகே கடந்த மே 8 அன்று இரவு காவனூரைச் சேர்ந்த பாஜக உறுப்பினரும், அக்கட்சியின் முன்னாள் மாவட்ட விவசாய அணி தலைவருமான மதுசூதனன் என்பவரை இரண்டு மோட்டார் சைக்கிள் வந்த மர்ம நபர்கள் 4 பேர், அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றனர். இந்த வழக்கில் பாஜக மாவட்டத் தலைவர் பாஸ்கர் மற்றும் மாநிலச் செயலாளர் செந்தில் அரசன் ஆகி யோர் மீது, மதுசூதனனின் மனைவி ஹரிணி குடவாசல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அத னடிப்படையில் நன்னிலம் துணை காவல் கண்காணிப்பாளர் சரவண குமார் தலைமையில் 4 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளின்படி விசாரணை மேற்கொண்டதில், கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் பகுதியைச் சேர்ந்த சரவணன் (24) மற்றும் திருவாரூர் காட்டூர் பகுதியைச் சேர்ந்த ஜெகதீசன் ஆகிய இருவரும் வெள்ளி யன்று மாலை கைது செய்யப்பட்ட னர். இவர்கள் இருவரும் பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாவட்டத் தலை வர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அக்கட்சியின் மாவட்டத் தலைவர் பாஸ்கர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட குடவாசல் பகுதி ஊடகப் பிரிவு தலை வர் பிரகாஷ், குடவாசல் ஓலைய மங்கலத்தைச் சேர்ந்த சாமிநாதன், திருவிடைமருதூர் பவுண்டரீகபுரம் விஜய், கும்பகோணம் கொரநாட்டு கருப்பூர் தீனதயாளன் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஹரி, விஐய் மற்றும் பாஜக மாநிலச் செயலாளர் செந்தில் அரசன் ஆகியோ ரை காவல்துறையினர் தேடி வரு கின்றனர். இச்சம்பவத்தை அடுத்து குடவாசல் காவல் நிலையம் வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், “வழக்கில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய 4 தனிப்படைகள் அமைத்து துரித நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது. மேலும் திருவாரூர் மாவட்டத்தில் முன் விரோதம் காரணமாக பழி வாங்கும் நோக்கில் செயல்படு பவர்கள், சட்டவிரோத நடவடிக்கை யில் ஈடுபட்டு பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துவர்களை கண்ட றிந்து, அவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தொடர்ந்து சட்டத் விரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறினார்.