திருவண்ணாமலை,ஜூன் 8- திருவண்ணாமலை கிரிவல பாதையில் மக்க ளின் அடிப்படை வசதிக்காக ஓய்வறை, அன்ன தானக் கூடம், கழிப்பிடம் உள்ளிட்ட புதிய கட்டி டங்கள் கட்ட தேர்வு செய்யப்பட்டுள்ள அரசுக்கு சொந்தமான இடங்களில் தமிழ்நாடு இந்து சமய அற நிலையத்துறை ஆணை யர் மற்றும் , மாவட்ட ஆட்சி யர் வெள்ளியன்று பார்வை யிட்டு ஆய்வு செய்தனர்.
14 கி.மீ. தூரமுள்ள திரு வண்ணாமலை கிரிவல பாதையில் மக்களுக்காக தங்கும் ஓய்வறை, அன்ன தானக் கூடம், கழிப்பிடம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளுக்கான கட்டிடங்கள் கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள அரசுக்கு சொந்தமான 27 இடங்களில் ஆணையர் கே.வி.முரளிதரன், ஆட்சி யர் தெ.பாஸ்கர பாண்டி யன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த னர்.
இதன்மூலம் மக்களுக் காக மேலும் கூடுதலாக பல்வேறு அடிப்படை வசதி கள் செய்ய இந்து சமய அற நிலையத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக இந்த ஆய்வின்போது ஆட்சி யர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது கூடுதல் ஆட்சியர் செ.ஆ.ரிஷப் திருவண்ணா மலை நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் ராஜ்குமார் உதவி கோட்ட பொறியாளர் அன்பரசு கோவில் இணைஆணையர் சி.ஜோதி மேலாளர் ஏ.செந்தில் (எ) கருணாநிதி கட்டிட வடிமைப்பாளர் ஆட்ரியன் டேவிட் தாசில்தார் மு.தியாகராஜன் கிராம நிர்வாக அலுவலர் விஜய ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.