districts

img

நெல்லை காங்கிரஸ் வேட்பாளர் சிபிஎம் தலைவர்களுடன் சந்திப்பு

திருநெல்வேலி, மார்ச் 29- இந்தியா கூட்டணியின் சார்பில் நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கி ரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் ரெட்டியார்பட்டியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவல கத்திற்கு வெள்ளிக்கிழமையன்று மாலை வருகை தந்தார். அவரை  கட்சியின் மாவட்டச் செயலா ளர் ஸ்ரீராம் மற்றும் மாவட்ட தலைவர்கள் வரவேற்று,வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

இந்த நிகழ்வில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மோகன்,துரைராஜ் பெரு மாள், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ்.கே. செந்தில், துரை நாராயணன், கு.பழனி, பி.எம். முருகன், பி.என்.இசக்கிமுத்து, குழந்தைவேலு, 55 வது வார்டு மாநகராட்சி கவுன்சிலர் முத்து சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.