புதுக்கோட்டை, செப்.22 - தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் செயலாளர் எழுத்தாளர் செம்பை மணவாளன் ஞாயிற்றுக்கிழமை காலை உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 80. எழுத்தாளர் செம்பை மணவாளன், நாவல், சிறுகதை, இசைப் பாடல்கள் உள்ளிட்ட பல்வேறு படைப்புகளை எழுதியுள்ளார். இவர் தமிழ்நாடு அரசின் மூத்த தமிழறிஞருக்கான விருது, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவரது உடல் புதுக்கோட்டை மச்சுவாடியில் உள்ள அவரது இல்லத்தில் திங்களன்று (செப்.23) மதியம் 2 மணி வரை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் சொந்த ஊரான செம்பாட்டூரில் அடக்கம் செய்யப்பட உள்ளது. இவருக்கு மனைவி காவேரியம்மாள், மகன்கள் ம.முருகானந்தம், ம.கண்ணன், ம.கலைமணி, மகள் ம.கவிதா ஆகியோர் உள்ளனர்.