districts

மகளிர் உரிமைத் திட்ட சிறப்பு முகாம்: ஆட்சியர் ஆய்வு

கும்பகோணம், ஆக.19 கும்பகோணம் பகுதியில் நடந்த கலைஞர்  மகளிர் உரிமை திட்ட சிறப்பு முகாமை தஞ்சாவூர் ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆய்வு செய்தார். கும்பகோணம் தாலுகா சாக்கோட்டை ஊராட்சியில் செயல்படும் பொது விநியோ கத் திட்ட அங்காடியில் உணவுப் பொருட்க ளின் இருப்பு மற்றும் தரம் குறித்தும், திப்பி ராஜபுரம் ஊராட்சி அரசு உயர்நிலைப்பள்ளி யில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும், வகுப்பறை கட்டிடத்தின் தன்மை குறித்தும், நூலகம், கணினி அறை,  சுற்றுச்சுவர் கழி வறை வசதிகள் குறித்தும் ஆய்வு செய் தார். பின்னர் அவர், அசூர் ஊராட்சியில் ரூ.1  லட்சத்து 22 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு உள்ள புதிய நூலகக் கட்டிடத்தின்  தரம் குறித்தும், அசூர் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளியில் ரூ.8 லட்சத்து 29 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் சமையல் கூடத் தையும் அதே ஊரில் செயல்படும் நெல்  கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் பணியையும் ஆய்வு செய்தார். திப்பிராஜபுரம் ஊராட்சி அரசு உயர் நிலைப்பள்ளி மற்றும் அசூர் ஊராட்சியில் நடைபெற்று வரும் சிறப்பு முகாமில் மக ளிருக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும்  கலைஞர் மகளிர் உரிமை திட்ட பயனாளி களின் விண்ணப்பங்களை பதிவு செய்யும் பணியையும் ஆய்வு செய்தார்.  ஆய்வின்போது கும்பகோணம் வரு வாய் கோட்டாட்சியர் பூர்ணிமா, வட்டாட்சியர்  வெங்கடேசன், வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் பூங்குழலி, ஆனந்தராஜ் மற்றும் அரசு  அலுவலர்கள் உடனிருந்தனர்.