பொன்னமராவதி, ஆக.26 -
சாலையோர வியாபாரி களை பாதுகாக்க நிரந்தர இடம் ஒதுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
சாலையோர வியாபாரி களை பாதுகாக்க நிரந்தர இடம் ஒதுக்க வேண்டும். சாலையோர வியாபாரி களை விடுபடாமல் கணக் கெடுத்து, புகைப்படம் எடுத்த அனைவருக்கும் அடையாள அட்டையை விரை வாக வழங்க வேண்டும்.
நகர விற்பனை குழு தேர்தலை நடத்திட வேண் டும். நகர விற்பனைக் குழு வில் இரண்டு பங்கு இடங் களை சாலையோர வியா பாரிகளுக்கு ஒதுக்க வேண்டும்.
சாலையோர வியாபாரி கள் பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிராக சாலையோர வியாபாரிகளை வலுக் கட்டாயமாக அப்புறப்படுத்த கூடாது. அனைத்து சாலை யோர வியாபாரிகளுக்கும் இலவச தள்ளுவண்டிகள் வழங்கிட வேண்டும்.
கூட்டுறவு வங்கிகள் மூலமாக வட்டியில்லா கட னாக ரூ.15 ஆயிரம் வழங்கப் படும் என்ற தேர்தல் வாக்குறு தியை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய கோரிக்கை முன்னெடுப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட் டம் பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு ஒன்றியச் செயலாளர் தீன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலா ளர் ஸ்ரீதர், மாவட்ட துணைத் தலைவர் அன்பு மணவாளன் ஆகியோர் சிறப்புரையாற்றி னர்.
சிபிஎம் ஒன்றியச் செய லாளர் பக்ருதீன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டக் குழு உறுப்பினர் நல்ல தம்பி, சிபிஎம் ஒன்றிய குழு உறுப்பினர் குமார் ஆகி யோர் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினர்.