பெருநாவலூர் அரசு கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம் அறந்தாங்கி,மார்ச் 8- புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பெருநாவலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-1 இன் சார்பில் , வாக்காளர் விழிப்புணர்வு பேரணி, வாக்காளர் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் பழனிதுரை தலைமையில் மாணவ, மாணவிகள் வாக்காளர் விழிப்பு ணர்வு உறுதிமொழியேற்றனர். அறந்தாங்கி வருவாய்க் கோட்டாட்சியர் சிவக்குமார் , கல்லூரி வளாகத்தில் மரக்கன்றை நட்டு வைத்தார். கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பெற்ற சனநாயக அறையைத் திறந்து வைத்தார். பெருநாவலூர் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் அஞ்சலிதேவி கார்த்திகேயன், ஊராட்சி மன்றத்தலைவர் பாகம்பிரியாள் ரெங்கையா, துணைத்தலைவர் அழ கேஸ்வரி முத்துராமலிங்கம் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.