districts

img

வேளாங்கண்ணி சிறப்பு இயக்கம்: எஸ்இடிசி அலட்சியம்

திருச்சிராப்பள்ளி, செப்.4- வேளாங்கண்ணி திரு விழாவிற்கு சில மாதங்க ளுக்கு முன்பே சிறப்பு பேருந்து  இயக்கத்திற்கு திட்டமிடும் நிர்வாகம், அதில் பணிபுரி யும் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள் செய் யாததைக் கண்டித்தும் தொழிலாளர்கள் தெருவில்  படுத்து உறங்கும் அவல நிலையை போக்கக் கோரி யும் திருச்சிராப்பள்ளியில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. திருச்சிராப்பள்ளி பணி மனை முன்பு சங்கச் செயலா ளர் ராமைய்யன் தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்  டத்தில் சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்க ராஜன், மாநிலத் தலைவர் அருந்தாஸ், சங்கத் தலை வர் ஜான் ஆச்சரியம், பொரு ளாளர் மகேந்திரன், பூண்டி, லூர்து, செல்வராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்  கேற்றவர்கள், “ ஒரே கழ கத்தில் வெவ்வேறு விதமான அட்வான்ஸ், ஓவர் டைம் வழங்குவதைக் கைவிட வேண்டும். திருச்சிராப்பளி  பணிமனையில் சென்ற ஆண்டு  வேளாங்கண்ணி சிறப்பு இயக்கம் இயக்கிய தொழி லாளர்களுக்கு இன்று வரை  வழங்காத அட்வான்ஸ், கூடு தல் பணி நேர பணப்பயன்  ஆகியவற்றை வழங்க வேண் டும் என வலியுறுத்தியும் முழக்  கங்களை எழுப்பினர்.