districts

டோல்கேட் கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்திடுக!

சிஐடியு வலியுறுத்தல் விருதுநகர், மே 29- ஒன்றிய அரசானது, டோல்கேட் கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும். புதிய மோட்டார் வாகன சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். டூரிஸ்ட்  வேன்களை நிறுத்திக் கொள்ள பொருத்த மான இடத்தை உள்ளாட்சி நிர்வாகம் ஒதுக்கித்தர வேண்டும் என சிஐடியு-சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் ஆண்டுப் பேரவையில் தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது. விருதுநகரில் டூரிஸ்ட் வேன் கார் டாட்டா  ஏசி மற்றும் கனரக வாகனங்களின் உரிமை யாளர் மற்றும் ஓட்டுநர்கள் சங்கத்தின் பேரவை கூட்டம் விஜய் தலைமையில் நடை பெற்றது. பி.செல்வகுமார், எஸ்.ராஜா, எம்.செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்த னர். துவக்கி வைத்து சங்கத்தின் மாவட்ட செயலாளர் எம். திருமலை பேசினார். மாவட்டத் துணைத் தலைவர் ஆர்.பால சுப்ரமணியன் விளக்கிப் பேசினார். சிபிஎம் நகர் செயலாளர் எல்.முருகன், முரளி ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினர். சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.என்.தேவா சிறப்பு ரையாற்றினார். சங்கத்தின் தலைவராக ஆர்.விஜய், செயலாளராக எஸ்.செல்வக்குமார், பொரு ளாளராக எஸ்.ராஜா, துணைத் தலைவ ராக ஜெயபிரகாஷ், துணைச் செயலாள ராக செந்தில் ஆகியோர் தேர்வு செய் யப்பட்டனர்.

;