districts

திருச்சி முக்கிய செய்திகள்

மாற்றுத்திறனாளிகள்  சங்க கிளை அமைப்பு 

தஞ்சாவூர், நவ.9 -  தஞ்சை மாவட்டம், பேராவூரணி ஒன்றியம் அம்மை யாண்டி ஊராட்சி வீரராகவபுரம் கிராமத்தில்,  புதன்கிழமை யன்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் கிளை அமைப்பு கூட்டம் ஆர். செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. விஜயகுமார் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் பி.எம். இளங்கோவன் விளக்கிப் பேசினார்.  இதில் கிளைத் தலைவராக ஆர்.பாலகிருஷ்ணன், துணைத் தலைவராக எஸ்.முருகேசன், செயலாளராக ஆர்.செல்வராஜ், பொருளாளராக ஆர்.சங்கீதா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.  இக்கூட்டத்தில், “100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் தொடர்ந்து வேலை வழங்க வேண்டும். நீண்ட நாட்களாக வழங்கப்படாமல் உள்ள கூலி பாக்கியை தாமதமின்றி உடனே வழங்க வேண்டும்.  வங்கிகளில் தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நிபந்தனை இன்றி கடன் வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கும்பகோணம்-தஞ்சை சாலையில் போக்குவரத்து மாற்றம்

கும்பகோணம், நவ.9 தீபாவளி பண்டிகைக்கு பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுவதால் கும்பகோணம்- தஞ்சை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் இருந்து நால் ரோடுவரை தஞ்சை மார்க்கத்தில் இருந்து வரக்கூடிய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மட்டும் ஒருவழி பாதை யாக பயன்படுத்தி கொள்ள அனுமதி அளிக்கப்பட் டுள்ளது. கனரக வாகனங்கள் அனைத்தும் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளது கும்பகோணத்தில் இருந்து தஞ்சை மார்க்கமாக செல்ல கூடிய வாகனங்கள் அனைத்தும் காமராஜர் சாலை, தலைமை தபால்நிலையம், ராமசாமி கோவில் வாசல், மொட்டைகோபுரம் வழியாக செல்ல அறிவுறுத்தப்பட் டுள்ளது.  இரு சக்கர வாகனங்களுக்கு பழைய மீன் மார்க்கெட், காந்தி பார்க், நாகேஸ்வரன் கோவில் தெற்கு வீதி உள்ளிட்ட இடங்களில் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கார்களை நிறுத்த மகாமகம் குளம், 60 அடி சாலை ஆகிய இடங்களில் இடவசதி செய்யப்பட்டுள்ளது.

பங்கு ஈவுத்தொகை வழங்கல் 

பாபநாசம், நவ.9-  தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே சரபோஜி ராஜபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்களுக்கு பங்கு ஈவுத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சங்க செயலாட்சியர் சின்ன பொண்ணு தலைமை வகித்தார். கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி கள மேலாளர்  இந்திரஜித்  1,715 உறுப்பினர் களுக்கு, 14 சதவீத பங்கு ஈவுத் தொகையாக ரூ.4 லட்சத்து 45 ஆயிரம் வழங்கினார். 

பேராவூரணி வட்டாட்சியரகத்தில்  சான்றிதழ் பெற முடியாமல் அவதி

தஞ்சாவூர், நவ.9 -  பேராவூரணி வட்டாட்சியர் அலுவல கத்தில் உள்ள மண்டல துணை வட்டாட்சி யர் நீதித்துறை பயிற்சிக்காக சென்றிருப்ப தால், பொதுமக்கள் சான்றிதழ் பெற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.  தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வரு வாய் வட்டத்தில், பேராவூரணி, குருவிக் கரம்பை, பெருமகளூர், ஆவணம் என நான்கு வருவாய் சரகங்கள் உள்ளன. இவற் றில் 54க்கும் மேற்பட்ட ஊராட்சிகளும், நூற் றுக்கணக்கான கிராமங்களும் உள்ளன.  இந்த கிராமங்களில் வசிக்கும் பொது மக்கள் தங்களுடைய பிறப்பு, இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ்,  இருப்பிடச் சான்றிதழ், வருமான சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களுக்கு இ-சேவை மையங்கள், ஆன்லைன் மூலம் விண்ணப் பிக்கும் நிலை உள்ளது.  இந்நிலையில் பேராவூரணி வருவாய்  வட்டாட்சியர் அலுவலகத்தில் மண்டல துணை வட்டாட்சியராக பணியாற்றி வாழும் சுப்பிரமணியன் என்பவர் நீதித்துறை பயிற்சிக்காக கடந்த 10 நாட்களாக வெளி யூருக்கு சென்றுள்ளார். இந்நிலையில், அவரது காலிப்பணியிடத்திற்கு, புதிய நியமனம் செய்யப்படாததால் பொது மக்கள் விண்ணப்பித்த 713 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.  பள்ளி, கல்லூரிகளில் கல்வி உதவித் தொகை உள்ளிட்ட  பல்வேறு காரணங்களுக் காகவும், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் போன்ற காரணங்களுக்காக இருப் பிட சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தவர் களின் சான்றுகள், மற்றும் பல்வேறு கார ணங்களுக்காக விண்ணப்பித்த பல்வேறு வகையான சான்றிதழ்கள், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆகி யோரின் கையெழுத்துக்கு பிறகு மண்ட லத்துறை வட்டாட்சியர் கையெழுத்துக் காக காத்திருக்கிறது.  இதன் காரணமாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அவதிப்படும் நிலை உள்ளது. எனவே, மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுத்து உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். தீபாவளி விடுமுறைக்கு முன்னதாக சான்றிதழ்கள் உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நவ. 24 முதல் டிச.4 வரை திருச்சியில் புத்தகத் திருவிழா

திருச்சிராப்பள்ளி, நவ.9- திருச்சிராப்பள்ளி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள செயிண்ட் ஜோசப் கல்லூரி மைதானத்தில், திருச்சி ராப்பள்ளி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் புத்தகத் திருவிழா நவம்பர் 24 முதல் டிசம்பர் 4 வரை நடைபெற உள்ளது.  இதற்கான முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அனைத்துத் துறை அரசு அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் மாவட்ட ஆட்சி யரகத்தில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், புத்தகக் கண்காட்சி நடைபெறவுள்ள செயிண்ட் ஜோசப் கல்லூரி மைதானத்தில் புத்தக அரங்கு கள், தினசரி நடைபெறும் கருத்தரங்குகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள், மேடை மற்றும் அரங்கம் அமைத்தல், உணவு அரங்கம் அமைத்தல், அறிவியல் மையம் மற்றும் பல்வகை கண்காட்சி கூடம் அமைத்தல் தொடர்பாகவும், அரசுத்துறை திட்ட விளக்க அரங்குகள் அமைத்திடவும், வாகனங்கள் நிறுத்துமிடம், குடிநீர் மற்றும் கழிவறை வசதி கள் உள்ளிட்ட மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற் பாடு பணிகள் குறித்தும் முன்னதாக மாவட்டத்தின் மாநகராட்சி, அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி பகுதிகளில் புத்தக கண்காட்சி நடைபெற உள்ளதை சிறந்த முறையில் விளம்பரப்படுத்தும் வகையில் பணிகளை விரைவாக மேற்கொள்ளவும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

குறிச்சி: புகையிலை இல்லா ஊராட்சி

தஞ்சாவூர், நவ.8-  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஒன்றியம் குறிச்சி ஊராட்சி, புகையிலை இல்லா ஊராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது.  குறிச்சி ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் வைரக்கண்ணு தலைமையில் புகையிலைப் பொருட் களுக்கு எதிரான விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், தஞ்சாவூர் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநரின் நேர்முக உதவியாளர் இளங்கோவன், வட்டார மருத்துவ அலுவலர் அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  கூட்டத்தில், “குறிச்சி ஊராட்சியில் புகையிலை பொருட்களை யாரும்  பயன்படுத்துவதில்லை எனவும், விற்பனை செய்வதில்லை எனவும் கிராம மக்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ‘குறிச்சி ஊராட்சி புகையிலை இல்லா ஊராட்சி’ என சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சந்திர சேகரன், சுகாதார ஆய்வாளர் பூவலிங்கம் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

சம்பா சாகுபடிக்கு பயிர் காப்பீடு செய்ய நவ.15 கடைசி நாள்

தஞ்சாவூர், நவ.8 -  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டாரத்தில், சம்பா சாகுபடி விவசாயிகள் அனைவரும் நவம்பர் 15 ஆம் தேதிக்குள் பயிர்க் காப்பீடு செய்திட பேராவூரணி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) எஸ்.ராணி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாத தாலும், சம்பா பயிர் வறட்சியை சந்திக்கும் சூழல் அதிகம் இருப்பதாலும், பேராவூரணி வட்டார விவசாயிகள் அனை வரும் தாங்கள் சாகுபடி செய்துள்ள சம்பா நெல் பயிருக்கு உடனடியாக பயிர்க் காப்பீடு செய்திட வேண்டும்.  சம்பா பயிருக்கு ஒரு ஏக்கருக்கான காப்பீடு தொகை ரூ.36,000. ஒரு ஏக்கருக்கு செலுத்த வேண்டிய பிரீமியத் தொகை ரூ.542. சிட்டா, அடங்கல், வங்கி பாஸ்புத்தக நகல்களுடன் இ-சேவை மையத்திற்கு சென்று நவ.15-க்குள் பதிவு செய்ய வேண்டும். பயிர் காப்பீடு செய்யும்போது வழங்கப்படும் ரசீதில் விவசாயிகள் தாங்கள் பயிர் செய்துள்ள கிராமத்தின் பெயர் சரியாக இடம் பெற்றுள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு தங்கள் தொகுதி வேளாண்மை உதவி அலுவலர்கள், வேளாண்மை அலுவலர் மற்றும் துணை வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் ஆகியோரை தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. 

மீனாட்சியம்மன் கோவிலுக்கு அறங்காவலர்கள் நியமனம்

மதுரை, நவ.9-  மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கான அறங்காவலர்கள் குழு நியமிப்பது தொடர்பாக இந்து அறநிலையத்துறை ஆலோசனையில் ஈடுபட்டுவந்தது.  இந்நிலையில், மதுரை அண்ணா நகரைச் சேர்ந்த தொழிலதிபரான பிகேஎம் குரூப் நிறுவனர் செல்லையா, மதுரை காந்திநகர் பகுதியை சேர்ந்த  சுப்புலட்சுமி, அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தாயார் ருக்மணி பழனிவேல்ராஜன், கே.கே.நகர் பகுதியை சேர்ந்த சீனிவாசன், அரசரடி பகுதியை சேர்ந்த மீனா அன்புநிதி ஆகியோர் மீனாட்சியம்மன் கோவில்  5 புதிய அறங்காவலர் உறுப்பினர் களாக புதனன்று இந்து அறநிலையத்துறையால் நியமிக்கப்பட்டனர். இந்த அறங்காவலர்கள் குழு உறுப்பினர்கள் 30 நாட்களுக்குள் அறங்காவலர்கள் குழு தலைவரை தேர்வு செய்வார்கள். இவர்களின் பதவி காலம் 2 ஆண்டுகள் எனவும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

100 நாள் வேலைக்கு ஊதியம் வழங்காத  பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் போராட்டம்  

விருதுநகர், நவ.8- விருதுநகரில் 100 நாள்  வேலை தொழிலாளர் களுக்கு ஊதியம் வழங்காத ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி யினர் ஆர்ப்பாட்டம் நடத்தி னர். மகாத்மா காந்தி தேசிய  ஊரக வேலை உறுதித் திட் டத்தில் நாடு முழுவதும் 1.31  கோடி தொழிலாளர்கள் உள்ளனர். இதில் தமிழ்நாட் டில் மட்டும் 91 லட்சம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், இத் தொழிலாளர்களுக்கான ஊதியம் கடந்த 14 வாரங்க ளாக சுமார் 2650 கோடி வரை  வழங்கப்படவில்லை. இத னால் தொழிலாளர்கள் கடு மையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள னர். இதற்கு பல்வேறு அமைப்பினர் கடும் கண்ட னத்தை தெரிவித்து வரு கின்றனர். இந்தநிலையில், விருது நகரில் இந்தியன் வங்கி முன்பு காங்கிரஸ் கட்சியினர்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். இப்போராட்டத்திற்கு விருதுநகர் மக்களவை உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர் தலைமை வகித்தார். அப்போது அவர் கூறு கையில், ‘‘விருதுநகர் மாவட்  டத்தில் 100 நாள்வேலை செய்த தொழிலாளர்களுக்கு ரூ.89 கோடி வர வேண்டும். அந்த பணத்தை பிரதமர் மோடி தர மறுக்கிறார். தீபா வளிக்குள் ஊதியம் வழங்க வில்லையெனில் நிர்மலா  சீதாராமன் விருதுநகர் வரும் போது நானே கருப்புக் கொடி காட்டுவேன். எளிய, நடுத்தர மக்கள் பயன்படுத்தும் ரயில்களை மத்திய அரசு தொடர்ந்து குறைத்து வருகிறது. வந்தே பாரத் போன்ற ஒரு ரயிலை இயக்கி விட்டு, அதற்கும் மிகப்பெரிய அள வில் கட்டணத்தை நிர்ணயித்  துள்ளனர். இது வருத்தத் துக்குரியது. மதுரை வரும்  தேஜஸ் ரயிலை கன்னியா குமரி வரை  நீட்டிக்க வேண்  டும்.ஏழை மக்கள் பயன்படுத்  தும் ரயில்களின் வேகத்தை  கூட்டுவதோடு, கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும். அதற்கான கட்ட ணத்தையும் குறைக்க வேண்டும். பாஜக அரசு கொண்டு வந்த ஜி.எஸ்.டி வரி சீராக இல்லை. வைரம் வாங்குபவர்களுக்கு 1.5 சத வீதமும், அரிசி வாங்குபவர்க ளுக்கு 6 சதவீதமும் விதிக் கிறது. இது மோடி அரசின் மோசமான நடவடிக்கை யாகும். இதை மாற்ற வேண் டும்” என தெரிவித்தார்.

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் அரசு இலவச வேஷ்டிகள் திருட்டு: 4 பேர் கைது

மதுரை, நவ.8- மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடக்கு வட்டாட்சியர் அலுவலக குடோனில் வைக்கப்பட்டிருந்த 12,500 இலவச வேஷ்டி பண்டல்கள் அடங்கிய 125 பண்டல்கள் திருடப்பட்டது.  இதுதொடர்பாக நில அளவை துறை கள உதவியாளர்  சரவணன், நெல்பேட்டையைச் சேர்ந்த சுல்தான் அலா வுதீன் (32), சாகுல் ஹமீது, இப்ராகிம் ஷா (47), செல்லூ ரைச் சேர்ந்த குமரன் (46), மதிச்சியத்தைச் சேர்ந்த மணி கண்டன் (36) உள்ளிட்ட 6 பேர் மீது தல்லாகுளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள சரவணன், ஷாகுல் ஹமீது ஆகியோரை தல்லாகுளம் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.