திருச்சிராப்பள்ளி, டிச.10- திருச்சி மாநகர் சாலை போக்கு வரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் செவ்வாய் அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெட்ரோல், டீசல் விலையை மத்திய, மாநில அரசுகள் கட்டுப் படுத்த வேண்டும்.
ஆன்லைன் அப ராதத்தை கைவிட வேண்டும். மோட்டார் வாகன தொழிலாளர்கள் மீது கொடூரமான வழக்குகளை பதிவு செய்யக் கூடாது. டோல் கேட் கட்டணங்களை ரத்து செய்ய வேண்டும். ஓலா, உபேர் போன்ற நிறுவனங்களை கட்டுப்படுத்தும் அடிப்படையில் அக்ரிகேட்டர் விதிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும்.
நெடுஞ்சாலை, விமான நிலையங்களில் ஓட்டுநர்க ளுக்கு பார்க்கிங், ஓய்வு அறை வசதி செய்து தரவேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைக ளை வலியுறுத்தி, திருச்சி மாநகர் சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில், செவ்வாய் அன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்டத் தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். கோரிக்கைக ளை விளக்கி சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கரா ஜன், மாவட்டத் தலைவர் சீனிவா சன், சங்க மாவட்டச் செயலாளர் சந்திரன், மாவட்டப் பொருளாளர் அந்தோணிசுரேஷ், மாவட்ட துணைச் செயலாளர்கள் பீர் முகம்மது, சுப்பிரமணி, மாவட்ட துணை தலைவர்கள் வருசை முகம்மது, ஜோசப், ராஜ்குமார் ஆகியோர் பேசினர். சங்க நிர்வா கிகள், உறுப்பினர்கள் உள்பட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர்
சிஐடியு சாலை போக்குவரத்து ஆட்டோ சங்கங்களின் சார்பில், தஞ்சாவூர் போக்குவரத்து துணை ஆணையர் அலுவலகம் முன்பாக, செவ்வாயன்று, மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் சிஐடியு தஞ்சை மாவட்டச் செயலாளர் சி.ஜெய பால் தலைமையில் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல் விலை மற்றும் இன்சூரன்ஸ் கட்ட ணத்தை குறைக்க வேண்டும். புதிய மோட்டார் வாகனச் சட் டத்தை திரும்ப பெற வேண்டும். மரண விபத்திற்கு ஐந்தாண்டு, பத்தாண்டு என்ற கொடூர தண்டனை யை ரத்து செய்ய வேண்டும். டோல்கேட் கொள்ளைக்கு முடிவு கட்ட வேண்டும். அமல்படுத்தப் பட்ட இயற்கை எரிவாயு பங்கு களை அதிகப்படுத்தி, எரிபொருள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது போக்குவரத்து வாகனங்களுக்கு சலுகை விலை யில் டீசல், பெட்ரோல் கிடைப்ப தை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோ ரிக்கைகள் இதில் வலியுறுத்தப் பட்டது.
ஆர்ப்பாட்டத்தில், சாலைப் போக்குவரத்து சம்மேளன மாநி லப் பொருளாளர் பி.பார்த்தசாரதி, சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் பி.என்.பேர்நீதி ஆழ்வார், கே. அன்பு, ஆட்டோ சங்க தஞ்சை மாவட்டத் தலைவர் ஆர். ஜெயக் குமார், சாலைப் போக்குவரத்து மாநிலக் குழு உறுப்பினர் ஜெய் சங்கர், பரத்ராஜன், மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் அந்தோணி, உரிமைக்குரல் ஓட்டுநர் சங்க மாவட்டச் செயலாளர் சிங்காரம், பொருளாளர் சுவாமிநாதன், மயி லாடுதுறை மாவட்டச் செயலாளர் செந்தில், புதிய ஜனநாயக தொழி லாளர் முன்னணித் தலைவர் லட்சு மணன் ஆகியோர் கோரிக்கை களை விளக்கிப் பேசினர்.
ஆர்ப் பாட்டத்தில் 200 க்கும் மேற்பட்ட ஓட்டுனர்கள் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு, போக்குவரத்துத் துணை ஆணையர் மற்றும் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுக்கள் கொடுக்கப்பட்டன.