districts

3 நாட்களாக மின்சாரம் இல்லை மாத்தூர் மக்கள் சாலை மறியல்

கும்பகோணம், ஆக.12-

    மாத்தூர் கிராமத்தில் தொடர்ந்து மூன்று நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருப்பதை கண்டித்து பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் ஒன்றியம் கும்ப கோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் ஊராட்சிக்குட் பட்ட அந்தோணியார் கோவில் தெரு, தோப்புதெரு பகுதி களில் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்ற னர்.

   ஆனால் இந்தப் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதால் கடும் அவதிக்கு உள்ள தாகவும், தடையின்றி மின்சாரம் வழங்க மின்சாரத் துறையிடம்  கோரிக்கை வைத்தனர். ஆனால் இதை கண்டு கொள்ளா மல், கடந்த மூன்று நாட்களாக மின்சாரத் துறையினர் அலட்சியமாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.  எனவே கோரிக்கைகளை அலட்சியப்படுத்தும் மின்துறையை கண்டித்து, அப்பகுதி  மக்கள் மாத்தூர் திருமலை ராஜன் ஆற்றுப் பாலத்தில் சாலை மறியலில் ஈடு பட்டனர்.

    தகவலறிந்து வந்த நாச்சியார்கோவில் போலீ சார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி னர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. மின்துறை உயர் அதிகாரி வந்தால் மட்டுமே சாலை மறியலை கைவிடுவோம்  என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.