பெரம்பலூர், ஜுலை 5 -
தமிழ்நாடு முழுவதும் ஜூலை 1 முதல் 10 ஆம் தேதி வரை தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் நடை பெற்று வருகிறது.
இதனொரு பகுதியாக, பெரம்பலூர் நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் தீக்கதிர் சந்தா சேகரிப்பு இயக்கம் தீவிர மாக நடைபெற்று வருகிறது. சந்தா சேகரிப்பு இயக்கத் தில் தீக்கதிர் திருச்சி பதிப்பு பொது மேலாளர் ஜெய பால், சிபிஎம் பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் பி. ரமேஷ், மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் என்.செல்லதுரை, அ.கலையரசி ஆகியோர் கலந்து கொண்ட னர்.
இதில் 65-க்கும் மேற்பட்ட அரையாண்டு, ஆண்டு சந்தா மற்றும் 5 ஆண்டு சந்தாக்கள் பெறப்பட்டன. கல்லூரி தாளாளர்கள், ஆட்டோ தொழிலாளர்கள், சிறு தொழில் அதிபர்கள், விவ சாயிகள், சாலையோர வியா பாரிகள் என பலர் தீக்கதிர் நாளிதழுக்கு சந்தா வழங்கி வருகின்றனர்.
திருவாரூர்
திருவாரூர் மாவட்டத் தில் தீக்கதிர் நாளிதழின் திருச்சி மண்டல பொறுப்பா ளர் ஐ.வி.நாகராஜன் தலை மையில், பல்வேறு இடங்களில் சந்தா சேக ரிக்கும் பணிகள் நடைபெற் றன. திருவாரூர் ஒன்றியச் செயலாளர் என்.இடும்பை யன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பா.கோமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கரூர்
கரூர் மாநகரம், குளித் தலை, கிருஷ்ணராயபுரம், தோகைமலை, கடவூர், அர வக்குறிச்சி ஆகிய ஒன்றி யங்களில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் நடை பெற்று வருகிறது. இப்பணி யில் கட்சியின் கரூர் மாவட் டச் செயலாளர் மா.ஜோதி பாசு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், ஒன்றியச் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கரூர் மாவட்டத்தில் இது வரை ஓராண்டு சந்தா-38, ஆறு மாத சந்தா-34, மாத சந்தா-13 என மொத்தம் 85 சந்தாக்கள் பெறப்பட்டு உள்ளன.