districts

img

ஆதரவற்ற மூதாட்டிக்கு தஞ்சை ஆட்சியர் உதவிக்கரம் நீட்டுவாரா?

தஞ்சாவூர், டிச.14-  திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் ஆதரவற்ற மூதாட்டியின் குடிசை வீடு முற்றிலும் எரிந்து  நாசமானதால், தஞ்சை ஆட்சியர் அவருக்கு  கருணை அடிப்படையில் வீட்டு கட்டிக் கொடுக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப் பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள முடச்சிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி புஷ்பவள்ளி (75). இவரது  கணவர் சிதம்பரம் மற்றும் மகன், மருமகள் ஆகியோர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு  இறந்துவிட்டனர்.  மூதாட்டி புஷ்பவள்ளி, பேராவூரணி அரசு  பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் தனது மகன் வழிப் பேத்தி யாழினி (16) என்பவரைப் பராமரித்துக் கொண்டு, ஆதரவின்றி, முடச்சிக்காடு கிரா மத்தில் லியாகத் அலி என்பவருக்கு சொந்த மான தென்னந்தோப்பில் சிறிய குடிசை வீட்டில் வசித்து வருகிறார்.  மூதாட்டி அவ்வப்போது கிடைக்கும் கூலி  வேலையைச் செய்தும், தனக்கு கிடைக்கும்  முதியோர் உதவித்தொகை மூலமும் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், பேத்தி யாழினிக்கு தேர்வு நடந்து கொண்டிருப்ப தால், புதனன்று பள்ளிக்கு சென்று விட்டார்.  மூதாட்டி புஷ்பவள்ளி வேலைக்கு சென்று விட்டார். அப்போது மதியம் சுமார் 2 மணியள வில் குடிசை வீடு திடீரென தீப்பிடித்து எரியத்  தொடங்கியது. அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைப்பதற்குள் குடிசை வீடு  முழுவதுமாக எரிந்து சாம்பலானது.  இதில், வீட்டிலிருந்த பாத்திரங்கள், ஆடைகள், பள்ளி பாடப் புத்தகங்கள், வங்கி, அஞ்சல் அலுவலக கணக்கு புத்தகங்கள், ஆதார் அட்டைகள், குடும்ப அட்டை, ஒரு பவுன் தங்க நகை, வெள்ளிக்கொலுசு என சுமார் ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசமாயின. வீட்டில் மின் இணைப்பு இல்லாத நிலையில், தீ விபத்து எப்படி ஏற்பட்டது என தெரியவில்லை.  எம்எல்ஏ உதவி இதுகுறித்து தகவலறிந்த,

பேராவூரணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நா. அசோக்குமார் வியாழக்கிழமை காலை சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு, மூதாட்டிக்கு தேவையான உதவிகளை செய்வதாக உறுதியளித்தார். பின்பு, தனது சொந்தப் பணத்திலிருந்து ரூ.10,000-ஐ மூதாட் டியிடம் வழங்கி ஆறுதல் கூறினார்.  மேலும், வட்டாட்சியர் தெய்வானை உத்த ரவின் பேரில், சரக வருவாய் ஆய்வாளர் வெற்றிச்செல்வன், வீரியங்கோட்டை-1 கிராம நிர்வாக அலுவலர் சிவமணி ஆகியோர்  சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி னர். தற்போது ஊராட்சி மன்றத் தலைவர் ஏற் பாட்டில், தற்காலிகமாக பொது இடத்தில் மூதாட்டியும், பேத்தியும் பாதுகாப்பாக தங்க  வைக்கப்பட்டுள்ளனர்.  இடம் வழங்கத் தயார் முடச்சிக்காடு தென்னந்தோப்பு உரிமை யாளரான லியாகத் அலி, தனக்கு சொந்த மான தென்னந்தோப்பில், மூன்று செண்ட் நிலத்தை மூதாட்டிக்கு இலவசமாக வழங்கு வதாக உறுதியளித்துள்ளார். அந்த இடத்தில்  அரசு வீடு கட்டி தந்தால் மட்டுமே அவ்வாறு  வழங்குவதாகவும் கூறியுள்ளார்.  எனவே தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், ஆதரவற்று 16 வயது பேத்தியுடன்  வாழ்ந்து வரும் மூதாட்டிக்கு கருணை அடிப் படையில் குடியிருக்க வீடு கட்டித் தர வேண்டும். தேர்வு நேரமாக இருப்பதால் மாணவிக்கு பாடப் புத்தகங்கள் வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வ லர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.