districts

img

நன்னிலம் வட்டாட்சியர் புதிய அலுவலகத்தை காணொலியில் முதல்வர் திறந்து வைத்தார்

திருவாரூர், மார்ச் 4 - தமிழக முதலமைச்சர் மயிலாடுதுறையில் இருந்து காணொலி வாயிலாக திரு வாரூர் மாவட்டத்தில் ரூ.306. 94 லட்சம் மதிப்பீட்டில் நன்னிலம் வட்டாட்சியர் அலு வலக புதிய கட்டடம் மற்றும்  ரூ.28.81 லட்சம் மதிப்பீட்டில் புதிய வட்டாட்சியர் குடி யிருப்பு கட்டடத்தை திறந்து வைத்தார்.  இதையொட்டி, நன்னி லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி யில் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ குத்துவிளக்கு ஏற்றி அலுவலகத்தை பார்வை யிட்டார். இந்த புதிய வட்டாட்சியர்  அலுவலக கட்டடமானது, தரைத்தளம், முதல் தளம்,  தள அறை என மொத்தம் 13,123 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. தரைத்தளத்தில் விசா ரணை, கணினி அறை, வட் டாட்சியர் அறை, அலுவல கம், எழுதுபொருட்கள் வைப் பறை, முக்கிய பிரிவு, ஆண்கள் கழிவறை, பெண்கள் கழிவறை, மாற்றுத் திறனாளிகள் கழிவறை, முதல் தளத்தில் பதிவறை, அலுவலகம், கூட்டரங்கம், தபால் அனுப்புதல் மற்றும்  பெறுதல் அறை, கழி வறை வசதியுடன் அமைக்கப் பட்டுள்ளது.  நிகழ்ச்சியில் வட்டாட்சி யர் குருமூர்த்தி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள் ளாட்சி அமைப்பின் பிரதி நிதிகள் கலந்து கொண்டனர்.