தஞ்சாவூர், ஜூலை 9- தஞ்சாவூர் டைடல் பூங்காவை சில வாரங்களில் தமிழக முதல்வர் திறந்து வைக்கவுள்ளார் என தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார். தஞ்சாவூர் மேலவஸ்தா சாவடி யில் டைடல் பூங்கா கட்டுமானப் பணி நிறைவடைந்துள்ளதை செவ்வாய்க் கிழமை ஆய்வு செய்த அவர் செய்தி யாளர்களிடம் தெரிவித்ததாவது: தஞ்சாவூரில் விவசாயிகளின் படித்த பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவதற்காக வும், தொழில்நுட்பப் புரட்சியை உரு வாக்குவதற்காகவும் இந்த டைடல் பூங்காவை தமிழக முதல்வர் அமைத் துள்ளார். இந்தக் கட்டுமானப் பணி முழுமையாக முடிவடைந்துள்ள தால், இப்பூங்காவை சில வாரங் களில் தமிழக முதல்வர் திறந்து வைக்கவுள்ளார். இந்தப் பூங்காவில் இதுவரை இரு நிறுவனங்கள் தொடங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் 7 நிறுவனங்கள் தொடங்குவதற்கு காத்திருக்கின்றனர். எனவே, திறப்பு விழாவுக்கு முன்பே நிறுவனங்கள் முழுமையாக வந்துவிடும். மேலும் நிறுவனங்கள் முன் வந்தால் அருகிலுள்ள இடத்தில் கட்டடம் கட்டப்படும். இதன் மூலம் ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது. இதேபோல, விழுப்புரத்தில் டைடல் பூங்கா திறக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் பணிகள் நடைபெறு கின்றன. உதகையில் மலைவாழ் மக்களுக்காக டைடல் பூங்கா தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. வதந்தி வேண்டாம் தஞ்சாவூரில் சிப்காட் தொழிற் பேட்டை அமைப்பது தொடர்பாக கடந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொ டரில் அறிவிக்கப்பட்டது. இதில், பல புதிய நிறுவனங்கள் தொடங்கப் பட்டு, பல ஆயிரக்கணக்கானோ ருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக செங்கிப்பட்டியி லுள்ள காசநோய் மருத்துவ மனையை அகற்றப் போவதாக சிலர் வதந்தியை பரப்பி வருகின்றனர். முற்றிலும் உண்மைக்கு புறம்பான தகவலை உள்நோக்கத்துடன் பரப்புகின்றனர். அதுபோல் அகற்றும் எண்ணம் இல்லை. காசநோய் மருத்துவமனை உள்ள இடத்துக் கும், சிப்காட் தொழிற்பேட்டைக்கும் தொடர்பில்லை. மேலும் காசநோய் மருத்துவ மனையைத் தரம் உயர்த்தி, சிப்காட்டுக்கு பயனுள்ளதாக செய்யப் படும். எனவே, வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் தெரி வித்தார். 3.57 லட்சம் மாணவர்கள் சேர்க்கை அப்போது, உடனிருந்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவிக்கையில், “அரசுப் பள்ளி களில் நிகழாண்டு இதுவரை 3.57 லட்சம் மாணவர்கள் புதிதாக சேர்ந்துள் ளனர். கடந்த ஆண்டை விட இது 5 சதவீதம் கூடுதல். இதையொட்டி, தேவையான வகுப்பறைக் கட்ட டங்கள் உள்ளிட்ட மேம்பாட்டு பணி களும் செய்யப்படுகின்றன” என்றார். ஆய்வின்போது மாவட்ட ஆட்சி யர் தீபக் ஜேக்கப், நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, தஞ்சாவூர் எம்எல்ஏ டி.கே.ஜி.நீலமேகம் மற்றும் பலர் உடனிருந்தனர்.