தென்காசி, ஆக. 6
தென்காசியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் புதிதாக கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்று உள்ளது. கூடுதல் மாவட்ட நீதிமன்றம், முதன்மை சார்பு நீதி மன்றம் மற்றும் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதி மன்றம் ஆகிய மூன்று நீதிமன்றங்கள் மட்டுமே புதிய நீதி மன்ற வளாக கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.
தென்காசி வருவாய் வட்டாட்சியர் அலுவலக வளா கத்தில் செயல்பட்டு வந்த தென்காசி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தை புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத் தில் மாற்றி அமைக்க வழக்கறிஞர்கள் சங்கங்கள் தொ டர்ந்து வலியுறுத்தி வந்தன. இந் நிலையில் வழக்க றிஞர்களின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு தென்காசி நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஆகஸ்ட் 7 திங்கட்கிழமை முதல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்பட திருநெல்வேலி முதன்மை மாவட்ட நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார் .இதனை தென்காசி அட்வகேட்ஸ் அசோசியேசன் சங்க செயலாளர் ஏ.வி.புக ழேந்தி தெரிவித்துள்ளார்.