மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் (நேர்முக தேர்வு அல்லாத பணிகள்) பதவிகளுக்கான தேர்வு நடைபெற்றதை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி பார்வையிட்டார். சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா, வட்டாட்சியர் விஜயராணி ஆகியோர் உடனிருந்தனர்.