பாபநாசம், செப்.7 - அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாபநாசம் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.5.28 லட்சத்தில் மேஜை, நாற்காலிகள், பீரோக்கள் வழங்கப்பட்டன. தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாபநாசம் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.5.28 லட்சம் மதிப்பீட்டில் மேஜை, நாற்காலிகள், பீரோக்கள் உள்ளிட்டவற்றை பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா வழங்கினார். அய்யம் பேட்டை பேரூராட்சித் தலைவி புனிதவதி, துணைத் தலைவர் அழகேசன், பள்ளி தலை மையாசிரியர் சரவணன் உட்பட பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மைக் குழுவினர் பங்கேற்றனர். இதில் மாணவர் களுக்கு அரசின் விலையில்லா சைக்கிள்களை பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா வழங்கினார். கீழமாஞ்சேரி பாபநாசத்தை அடுத்த கபிஸ் தலம் அருகே திருவைக்காவூர் ஊராட்சி கீழமாஞ்சேரி கிராமத்தில் நிலவி வந்த குடிநீர் பிரச்சனையை தீர்க்கும் வகை யில், பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2023-24 இன்கீழ் கட்டப்பட்ட 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.