நாகர்கோவில், ஏப்.21- குமரி மாவட்டத்தில் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் தேர்தல் பணிகளில் எந்த வொரு அசம்பாவிதமும் நடைபெறாத நிலை யில் மிக சிறப்பாக செயல்பட்ட காவலர் களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார். தமிழகம் எங்கும் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டி ருந்தது. அதனைத் தொடர்ந்து பல்வேறு அரசி யல் கட்சிகளின் பிரச்சாரங்கள், மிக முக்கிய நபர்களின் பிரச்சாரங்கள், பொதுக் கூட்டங் கள் நடைபெற்றன. குமரி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தர வதனம் தலைமையில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலை யில் எந்த பிரச்சனைகளும் இல்லாத வண்ணம் சிறப்பான முறையில் தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைந்தது. தொடர்ந்து மாவட்டத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு அமைதியாக நடத்தும் வகையில் மாவட்டம் முழுவதும் உள்ள வாக்குப்பதிவு மையங்கள் மற்றும் பிரச்ச னைக்குரிய பகுதிகளில் பாதுகாப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. இந்நிலை யில் தேர்தல் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் அமைதியாக நடந்து முடிந் தது. அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங் களும் சனிக்கிழமை கோணம் அரசு பொறி யியல் கல்லூரியில் ஏற்படுத்தப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வைத்து அதி காரிகள் மற்றும் வேட்பாளர்கள் முன்னிலை யில் சீல் வைக்கப்பட்டது. மத்திய காவல் படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை, தமிழ்நாடு ஆயுதப்படை, மற்றும் தாலுகா காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் அடங்கிய நான்கு அடுக்கு பாது காப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 24 மணி நேரமும் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படு கிறது. மேலும் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் அதனை பார்வையிடவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. தேர்தல் பாதுகாப்பு பணியில் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் தேர்தல் அமைதியாக நடைபெற சிறப்பாக பணி யாற்றிய காவல் அதிகாரிகள், மத்திய ரயில்வே படை, கேரளா ஆயுதப்படை காவலர்கள், ஊர்க்காவல் படையினர், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற காவலர்கள் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்.