தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு அரியலூரில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.வாலண்டினா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரை.அருணன், ஒன்றியச் செயலாளர் அருண்பாண்டியன், மாவட்டக்குழு, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.