மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள 4 வட்டங்களில் ஜமாபந்தி முகாம்கள் துவங்கின. தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில், சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா தலைமையில் நடைபெற்றது. முகாமில் தரங்கம்பாடி வட்டத்துக்கு உட்பட்ட கஞ்சாநகரம், லட்சுமிநாராயணபுரம், மேலையூர், கருவாழக்கரை, கீழையூர், நடுக்கரை கீழ்பாதி, கிடாரங்கொண்டான், மேலப்பெரும்பள்ளம், கீழப்பெரும்பள்ளம் ஆகிய வருவாய் கிராமங்களின் கணக்குகள் சரிபார்க்கப்பட்டன. பல்வேறு கோரிக்கை தொடர்பான மனுக்களை பொது மக்கள் வழங்கினர்.