districts

img

பிளஸ்-2,10 ஆம் வகுப்பு தேர்வு: மாவட்ட அளவில் செலக்சன் பள்ளி சாதனை

அறந்தாங்கி. மே 14-  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி  எல்.என்.புரம் பகுதியில் இயங்கி வரும் செலக்சன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2  பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் மூன்றாம் இடமும். அறந்தாங்கி கல்வி மாவட்ட அளவில் முதலிடமும் பெற்றது.  பள்ளி மாணவர் எஸ். தனபால். 586 மதிப்பெண்கள், மாணவர் ஆர் தவவர்மா 566 மதிப்பெண்கள், மாணவி.கே. அவிநயா 555 மதிப்பெண்கள் பெற்றனர்.  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நூறுசதவீத தேர்ச்சியுடன் அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் பள்ளி அளவில் செலச்சன் பள்ளி மாணவர்கள் சாதனை புரிந்தனர்.  பள்ளி மாணவர்கள் ஏ.பி.ஆர்யா, எஸ். சந்தோசினி, சி, ஆதவன் ஆகிய மூன்று மாணவர்களும் தலா 491 மதிப்பெண்கள் பெற்று முதலிடம், எம் .கலைக்குமாரி 490 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் இரண்டாம் இடமும், எம். காயத்ரி 488 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம் பெற்றனர்.  மேலும் 450 க்கு மேல் 42 மாணக்கர் களும் 400 க்கு மேல் 57 மாணவர்களும் மதிப்பெண்கள் பெற்றனர், மேலும் கணிதத்தில் 10 மாணவர்கள் 100 மதிப்பெண்களும்,  அறிவியல் பாடத்தில் 22 மாணவர்கள் 100 மதிப்பெண்களும்,  சமூக அறிவியல் பாடத்தில் ஏழு மாணவர்கள் 100 மதிப்பெண்களும் பெற்றனர். சிறப்பிடம் பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் கண்ணையன், பள்ளி முதல்வர் சுரேஷ் குமார் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தி, பாராட்டினர்.

;