districts

img

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அருமனையில் சமய நல்லிணக்க விழா

அருமனை, டிச.17 - கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் கிறிஸ்தவ பொது நல அமைப்பு தொடர்ந்து சமய நல்லிணக்க விழாவை நடத்தி  வருகிறது. இந்த ஆண்டு புண்ணியத்தில் தனியார் திருமண மண்டபத்தில்  இரண்டு ஜோடிகளுக்கு இலவசமாக திருமணம்  நடத்தி வைக்கப்பட்டு ஏழைகளுக்கு நலத்திட்ட உதவியும் வழங்கப்பட்டது.  இந்நிகழ்ச்சிக்கு என். தேவராஜ் தலைமை தாங்கினார். டி. சி. டார்வின் கான்ஸ்டன், எஸ்.சசன் குமார், எஸ்.எபனேசர் உட்பட  பலர் முன்னிலை வகித்தனர்.  தகவல் தொழில்நுட்ப துறை  அமைச்சர் க.தங்கராஜ், மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் மார்பவுலோஸ், சுரேஷ் சாமியார்காணி, தக்கலை  மறைமாவட்ட ஆயர் ஜார்ஜ் ராஜேந்திரன், ஷாஜகான், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் புஸ்பலீலா ஆல்பன் ,முழுக் கோடு ஊராட்சி துணைத் தலைவர் சி.சசிகுமார், அருமனை  பேரூராட்சி முன்னாள் தலைவர் சி.பி.சுஜி, ராஜேஷ்குமார் உட்பட பல அரசியல் கட்சி பிரமுகர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள்  மணமக்களை வாழ்த்தினர். திருமண விழாவில் கலந்து கொண்ட ஏழைளுக்கும்  மாற்றுதிறனாளிகளுக்கும் நல உதவி கள் வழங்கப்பட்டது.