திருச்சிராப்பள்ளி, அக்.8 - பெண் பாலின சமத்து வத்தை வலியுறுத்தி கன்னி யாகுமரி முதல் குஜராத் வரை பாதுகாப்பு படை வீராங் கனைகள் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது. சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினமான அக்.31, தேசிய ஒற்றுமை தினமாக கடைபிடிக்கப்படு கிறது. பெண்களின் முக்கி யத்துவம், வலிமை, பாது காப்பு மற்றும் பெண் பாலின சமத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தி, ஒன்றிய பெண் கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் மற்றும் ஒன்றிய ரிசர்வ் காவல்படை (CRPF) இணைந்து 120 பெண் சிஆர்பிஎப் வீராங் கனைகள் பங்கேற்ற இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி, அக்.5 அன்று கன்னியாகுமரியில் தொடங் கியது. இப்பேரணி, கேரள மாநி லம் திருவனந்தபுரம், மதுரை, திருச்சி வழியாக குஜராத்தில் நிறைவடைய உள்ளது. இந்த வீராங்க னைகளை உற்சாகப்படுத் தும் வகையில், திருச்சி அனைத்து ரோட்டரி சங்கங் கள் மற்றும் ஜோசப் கண் மருத்துவமனை இணைந்து மலர் தூவி வரவேற்றது. ஜோசப் கண் மருத்துவ மனை வளாகத்தில் நடை பெற்ற வரவேற்பில், மாநகர காவல்துறை ஆணை யர் காமினி, ரோட்டரி மாவட்டம் 3000-ன் முன்னாள் ஆளுநர் பாலகிருஷ்ணன், கார்த்திகேயன், காவல் துணை ஆணையர் செல்வ குமார் உள்ளிட்ட பலர் பங்கேற் றனர். ஜோசப் கண் மருத்துவமனை நிர்வாகி சுபாபிரபு நன்றி கூறினார்.