புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் மின் சிக்கன வார விழா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. திருமயம் செயற்பொறியாளர் ஆனந்தாய் பேரணிக்கு தலைமை வகித்து கொடியசைத்து துவக்கி வைத்தார். பொறுப்பு உதவி செயற்பொறியாளர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். காந்தி சிலை முன்பு துவங்கிய பேரணி அண்ணாசாலை, பேருந்து நிலையம் வழியாக மின்வாரிய அலுவலகத்தில் முடிவுற்றது.