புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு சார்பில் கறம்பக்குடி வட்டாட்சியரும், ஆசிரியருமான ஜபருல்லாவின் 30 ஆண்டு பணியை பாராட்டி விழா நடைபெற்றது. அறந்தாங்கி ஐஎம்ஏ தலைவர் டாக்டர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். சிபிஎம் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் கவிவர்மன், மாவட்ட அரசு வழக்கறிஞர் . வெங்கடேசன்,ஐடியல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சேக் சுல்தான், யாழ் பள்ளி நிறுவனர் சேதுராமன், கே பி எஸ் எஸ் சி தலைவர் சுப்பிரமணியன், செலக்சன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் சுரேஷ் குமார், மனிதநேய ஜனநாயக கட்சியின் முனைவர் முபாரக் அலி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தொல்காப்பியன், ஆகியோர் பங்கேற்றனர். கவிஞர் ஜீவி சிறப்புரையாற்றினார்.