districts

சேலம்: வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்கிடுக

சேலம், மார்ச் 11- வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி சேலத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார் பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். 2021  ஆம் ஆண்டு டிச.9 ஆம் தேதி தில்லியில்  விவசாயிகளுக்கு எழுத்துப்பூர்வமாக கொடுக்கப்பட்டு, இரண்டு ஆண்டுக ளாக நிறைவேற்றப்படாத வாக்குறுதி களை ஒன்றிய அரசு நிறைவேற்றி தர  வேண்டும். மேலும், மக்களவைத் தேர்த லில் உத்தரப்பிரதேச மாநிலம், லக்கிம் பூர் கேரி தொகுதியில், விவசாயி கள் படுகொலைக்கு முக்கிய காரணமா வரும், அச்சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியின் தந்தையுமான அஜய் மிஸ்ராயை பாஜக வேட்பா ளராக அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித் தும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் திங்களன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாயி கள் முன்னணியின் மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் ஏ.ராமமூர்த்தி, தமிழ்நாடு  விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் பி.தங்கவேலு, ஏஐகேகே எம்எஸ் மாநில உதவித்தலைவர் ஆர்.நடராஜன், ஏஐகேஎஸ் மாவட்டச் செயலாளர் என்.கே.செல்வராஜ், ஐக்கிய விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் டி.கோவிந்தன், விவசா யத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.தனக்கோட்டி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் மோகன் உட்பட பலர் பங்கேற்ற னர்.