districts

img

மழைக்கால நிவாரணத் தொகையை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்

அரியலூர், ஜன.10 - தொடர் மழை காரணமாக, பொங்கல் பானைகள் தயார் செய்யும்  பணிகள் தாமதமாகி உள்ளன. எனவே, மழைக்கால நிவாரணத் தொ கையை ரூ.10 ஆயிரம் உயர்த்தி வழங்க வேண்டுமென தமிழக அர சுக்கு மண்பாண்டத் தொழிலா ளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் அருகே உள்ள சோழமா தேவி கிராமத்தில் சுமார் 50-க்கும்  மேற்பட்ட மண்பாண்டத் தொழிலா ளர் குடும்பத்தினர் வசித்து வரு கின்றனர். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இத்தொழிலை பல்வேறு சிரமங்களுக்கு இடையில் செய்து வருகின்றனர்.  இந்நிலையில், கடந்த மாதம் பரவலாக பெய்த கனமழையால், பொங்கல் பானை தயார் செய்யும் மூலப் பொருட்களான களிமண் மிக வும் பாதிக்கப்பட்டது. மேலும் வானம்  மேகமூட்டத்துடன் இருந்ததால் களி மண்ணை காய வைக்க முடியாமல் மண்பாண்ட தொழிலாளர்கள் சிரமப் பட்டனர். கடந்த ஒருசில நாட்களாக வெயில் அடிப்பதால், மண்பாண் டத் தொழிலாளர்கள் பொங்கல் பானை தயார் செய்யும் பணிகளை  தொடங்கியுள்ளனர். எதிர்வரும் நாட்களில் மழை பெய்தால் எங்கள்  தொழில் முற்றிலுமாக பாதிக்கப் படும் என அத்தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.  எனவே தமிழக அரசு வழங்கும் ரூ.5 ஆயிரம் மழைக்கால நிவாரணத் தொகையை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி அறிவிக்க வேண்டும். கடந் தாண்டு மழைக்கால நிவாரணத் தொகை பாதி பேருக்கு மட்டும் தான் வழங்கப்பட்டுள்ளது. மீத முள்ளவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கவில்லை.  மண்பாண்டம் செய்வதற்கு முக்கிய மூலப்பொருளான களி மண்ணை எடுக்க அனுமதி மறுத்துள் ளதால், பல்வேறு சிரமங்களை அனு பவித்து வருகிறோம். எனவே இலவச மாக மண் எடுப்பதற்கு அரசு அனு மதி வழங்க வேண்டும்.  தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசுத்  தொகுப்பில் கரும்பு வழங்குவதை போன்று, மண்பானைகள் மற்றும் மண் சட்டிகளையும், அரசே கொள் முதல் செய்து வழங்கினால் எங்க ளது வாழ்வாதாரம் உயரும் என்று மண்பாண்டத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.