திருச்சிராப்பள்ளி/கரூர்/தஞ்சாவூர், ஜன.17 - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய கட்டுமானத் தொழிலா ளர்கள் சங்கம் இணைந்து 10 ஆவது ஆண்டாக சிறுவர்-சிறுமிகளுக்கான விளையாட்டு விழாவை நடத்தின. திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணப் பாறை வட்டம் உசிலம்பட்டி ஊராட்சி தவுட்டுப்பட்டியில் நடந்த விழாவிற்கு வாலிபர் சங்க கிளைச் செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். விளையாட்டு போட்டியை ஊர் நாட் டாண்மை பழனியாண்டி துவக்கி வைத் தார். விழாவில் 100 மீட்டர், 50 மீட்டர் ஓட்டப்பந்தயம், திருக்குறள் போட்டி, பாட்டுப்போட்டி, கோலப்போட்டி, சோடா பாட்டிலில் நீர் நிரப்புதல், பானை உடைத்தல், தேங்காய் உடைத்தல், பேச்சுப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. சிறப்பு விருந்தினர்களாக வாலிபர் சங்க மாநில துணைச் செயலாளர் செல்வராஜ், மாவட்டச் செயலாளர் பால குமார், வட்டச் செயலாளர் அய்யாவு, வட்டத் தலைவர் வாசு, வட்டப் பொரு ளாளர் வினோத்குமார், கட்டுமான சங்க மாவட்டத் தலைவர் தியாகராஜன், வட்டச் செயலாளர் நித்தியானந்தம், தலை வர் மணி, துணைச் செயலாளர் முத்துச் சாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். விழாவில் வாலிபர் சங்கம், கட்டு மான சங்க நிர்வாகிகள், கிளை உறுப் பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். கிரிக்கெட் தொடர் போட்டி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் ஸ்ரீரங்கம் பகுதி குழு மற்றும் சிங்கர் கோவில் கிளை இணைந்து நடத்திய டி- 20 கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த ஜன.13 அன்று துவங்கி 4 நாட்கள் நடைபெற்றது. இதற்கு கிளைத் தலைவர் பிரசன்னா தலைமை வகித்தார். போட்டியை வாலி பர் சங்க மாநகர் மாவட்டச் செயலாளர் சேதுபதி, மாவட்ட தலைவர் லெனின் ஆகி யோர் துவக்கி வைத்தனர். இதில் மொத்தம் 16 அணிகள் விளையாடின. வெற்றி பெற்ற முதல் நான்கு அணி களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப் பட்டன. முதல் அணிக்கு ரூ.15000, 2 ஆவது அணிக்கு ரூ.10000, 3 ஆவது அணிக்கு ரூ.8000, 4 ஆவது அணிக்கு ரூ.5000 என பரிசுகளை, ஸ்ரீரங்கம் பகுதிச் செயலா ளர் சந்துரு, பகுதி துணைச் செயலாளர் வெங்கடேசன், சிபிஎம் ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் தர்மா, சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் ஸ்ரீரங்கம் பகுதி செய லாளர் சுப்பிரமணி, தரைக்கடை தள்ளு வண்டி சங்க ஸ்ரீரங்கம் பகுதி தலைவர் கோவிந்தன் ஆகியோர் வழங்கினர். கரூர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இளம் தென்றல் இளைஞர் அமைப்பு இணைந்து கரூர் மாவட்டம், கோடங்கிப்பட்டியில் பொங்கல் விளை யாட்டு விழாவை நடத்தின. விழாவில் கபடி, சைக்கிள் போட்டி உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவிற்கு வாலிபர் சங்க கோடங்கிப்பட்டி முன்னாள் கிளை செயலாளர் முருகன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் மா.ஜோதி பாசு, வாலிபர் சங்க கரூர் மாநகர தலை வர் சிவா ஆகியோர் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினர். வாலிபர் சங்கம் மற்றும் இளைஞர் அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் தெற்கு ஒன்றியம் செங்கிப்பட்டி, இராய முண்டான்பட்டி ஆகிய இடங்களில் பொங்கல் விளையாட்டு விழா, இரவு தப்பாட்டம் மற்றும் பரிசளிப்பு விழா பொது மக்கள் பங்கேற்போடு நடைபெற்றன. செங்கிப்பட்டியில் வாலிபர் சங்க ஒன்றி யக் குழு உறுப்பினர் டி.ஆனந்த்குமார், இராயமுண்டான்பட்டியில் எஸ்.வி.சந் தோஷ் ஆகியோர் தலைமை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா ளர் என்.வி.கண்ணன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மாநிலச் செய லாளர் எஸ்.தமிழ்ச்செல்வி, சிபிஎம் ஒன்றி யச் செயலாளர் சி.பாஸ்கர், ஊராட்சி மன்றத் தலைவர் சித்ரா கார்த்தீஸ்வரன் (செங்கிப்பட்டி), கனிமொழி சிவக்குமார் (இராயமுண்டான்பட்டி), வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் டி.தமிழ்ச்செல் வன், ஒன்றியத் தலைவர் எல்.முருகா னந்தம், விவசாயிகள் சங்க ஒன்றியச் செய லாளர் கே.தமிழரசன், விவசாயத் தொழி லாளர் சங்க ஒன்றியச் செயலாளர் எஸ். வியாகுலதாஸ், ஒன்றியத் தலைவர் எம். காமராஜ், மாணவர் சங்க மாவட்டத் தலை வர் அர்ஜுன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.