திருத்துறைப்பூண்டி, நவ.29 - மின்வாரியத்தை தனியார் மய மாக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை ஒன்றிய அரசு உடனடியாக கைவிடக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் திருச்சி, திருவாரூ ரில் மனு கொடுக்கும் போராட்டம் நடை பெற்றது. திருத்துறைப்பூண்டியில், காமராஜர் சிலையிலிருந்து தொடங்கி, நகரத்தின் முக்கிய சாலை வழியாக மின்சார வாரிய அலுவலகம் வரை ஊர்வலமாக சென்று மனு கொடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட னர். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் தலைமை வகித்து கண்டன உரையாற்றினார். திருத்துறைப் பூண்டி தெற்கு ஒன்றியச் செயலாளர் டி.வி.காரல்மார்க்ஸ், வடக்கு ஒன்றியச் செய லாளர் வி.டி.கதிரேசன், நகரச் செயலா ளர் கே.கோபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. தமிழ்மணி, மாவட்டக் குழு உறுப்பி னர்கள் டி.சுப்பிரமணியன், எஸ்.சாமி நாதன், வாலிபர் சங்க மாவட்டத் தலை வர் ஏ.கே.வேலவன், மாதர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பவானி, நகர்மன்ற துணைத் தலைவர் எம்.ஜெயபிரகாஷ், ஒன்றிய கவுன்சிலர் கு.வேதரெத்தினம், மற்றும் ஒன்றிய, நகரக் குழு உறுப்பி னர்கள், கிளை செயலாளர்கள், பொது மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மன்னார்குடி, நீடாமங்கலம் மன்னார்குடி மின்வாரிய கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது. நகரச் செயலாளர் ஜி.தாயுமானவன் தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் ஆறு.பிரகாஷ் உரையாற்றி னார். மக்களிடம் பெறப்பட்ட கையெழுத் துகள் அடங்கிய மனு மின்வாரிய கோட்ட செயற்பொறியாளரிடம் அளிக்கப்பட்டது. இதில் ஒன்றியச் செயலாளர் கே.ஜெய பால், சிஐடியு தலைவர்கள் ஜி.ரகுபதி, டி. ஜெகதீசன், ஜி.முத்துக்கிருஷ்ணன், ஏ.பி. தனுஷ்கோடி, சுப்பிரமணியன் உள்ளிட் டோர் பங்கேற்றனர். நீடாமங்கலம் மின்வாரிய அலுவலகம் முன்பு ஒன்றிய செயலாளர் ஜான் கென்னடி தலைமையில் இயக்கம் நடை பெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.கந்தசாமி பேசினார். ஒன்றியக் குழு உறுப்பினர்கள் டி.அண்ணாதுரை, டி.முரு கேசன், ஆர்.சுமதி, வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் எஸ்.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திருச்சிராப்பள்ளி ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தின் பாதிப்பு கள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பொதுமக்களிடம் எடுத்துக் கூறி கையெழுத்து இயக்கத்தை கடந்த ஒரு வார காலமாக நடத்தினர். இதைய டுத்து மக்களிடம் கையெழுத்து பெற்ற படி வங்களை அந்தந்த பகுதிகளில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஒப்படைக் கும் போராட்டம் நடைபெற்றது. இதனொரு பகுதியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மருங்காபுரி வட்டக் குழு சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு வட்டக் குழு உறுப்பினர் சி.அண்ணாதுரை தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி வட்டச் செயலாளர் ப. தியாக ராசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.சிதம்பரம் ஆகியோர் பேசினர். பின்னர் மின்வாரிய உதவி செயற்பொறியாளரி டம் மனுக் கொடுக்கப்பட்டது. வையம்பட்டியில் நடந்த போராட்டத் திற்கு ஒன்றியச் செயலாளர் வெள்ளைச் சாமி தலைமை வகித்தார். மாவட்ட செயற் குழு உறுப்பினர் பன்னீர்செல்வம் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பேசினர். பின்னர் வையம்பட்டி மின்வாரிய செயற் பொறியாளரிடம் மனு கொடுக்கப்பட்டது.