திருச்சிராப்பள்ளி, அக்.9 - திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்க ளன்று மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு பகுதிச் செயலாளர் ரபீக்அஹமது, அப்பகுதி மக்கள் சார்பில் 324 மனுக் களை மாவட்ட ஆட்சியரி டம் வழங்கினார். அம்மனுவில், “திருச்சி மேற்கு சட்டமன்ற தொகு திக்குட்பட்ட முஸ்லிம்தெரு, காவேரிநகர், மாரியம்மன் கோவில், பாண்டமங்க ளம், புத்தூர், வண்ணாரப் பேட்டை, தென்னூர் பகுதி களில் சுமார் 30 ஆண்டு களுக்கும் மேலாக வாடகை வீட்டில் குடியிருந்து வரும் சொந்த வீடில்லாதவர் களுக்கு இலவச வீட்டு மனை வழங்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டி ருந்தது. மனுவை மாவட்ட ஆட்சி யரிடம் வழங்கிய போது, மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ராமச்சந்திரன், பகுதிக் குழு உறுப்பினர்கள் அப்துல் கையும், கிளைச் செய லாளர்கள் வெங்கடாசலம், சுப்ரமணி ஆகியோர் உடனி ருந்தனர்.