திருவாரூர், பிப்.2 - திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்தில் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் 12 ஆம் ஆண்டின் அமைப்பு தின பேரவை நடைபெற்றது. கூட்டத்திற்கு அமைப்பின் வட்டத் தலை வர் எஸ்.புஷ்பநாதன் தலைமை வகித்தார். செயலாளர் ஏ.சண்முகம் வரவேற்றார். வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம் முன்பு அமைப்பின் கொடியை ஏற்றி வைத்து, மாநிலச் செயலாளர் குரு.சந்திரசேகரன் சிறப்புரையாற்றினார். சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 70 வயதில் 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற அங்கன்வாடி, சத்துணவு கிராம உதவியா ளர்கள், ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம் பெற்று ஓய்வுபெற்ற அனை வருக்கும் குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூ. 7850 வழங்க வேண்டும். மருத்துவ காப் பீட்டு திட்டத்தில் உள்ள குறைகளை கலைந்து அனைவருக்கும் புகைப்படம் ஒட்டிய அடை யாள அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.