districts

img

மின்வாரிய களப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும்

திருச்சிராப்பள்ளி, பிப்.7 - மின்வாரிய களப் பணியாளர் களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டு மென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழக மின் வாரியத்தின் களப்பணி யாளர்கள் அனைவரையும் கள உதவி யாளர்களாக பணி மாற்றம் செய்ய  வேண்டும். களப் பணியாளர்களுக்கு 6  சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வேண் டும். மின்வாரிய ஊழியர்களுக்கு 1-12-2023 முதல் வழங்க வேண்டிய ஊதிய  உயர்வு பேச்சுவார்த்தையை தொடங்க  வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய அலுவல கங்களில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சார்பில் செவ் வாயன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.  திருச்சியில் மன்னார்புரத்தில் உள்ள  திருச்சி மின் பகிர்மான வட்ட மேற் பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தின் வட்டத் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். வட்டச் செயலா ளர் செல்வராசு, பொருளாளர் பழனி யாண்டி ஆகியோர் முன்னிலை வகித்த னர்.  தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணைத்தலைவர் ரெங்கராஜன் சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு மின் பொறியாளர் அமைப் பின் மாநில துணைப் பொதுச் செயலா ளர் இருதயராஜ் வாழ்த்துரை வழங்கி னார். இந்த போராட்டத்தில் திரளான  மின்வாரிய பணியாளர்கள் கலந்து கொண்டனர். கிழக்கு கோட்டச் செயலா ளர் நாகராஜன் நன்றி கூறினார்.