திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அமைந்துள்ள வாக்குப் பதிவு இயந்திர வைப்பறையிலிருந்து, நாடாளுமன்ற வாக்குப்பதிவுக்கு கணினி வழி குலுக்கல் முறையில் தேர்வான வாக்குப்பதிவு இயந்திரங்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் பிரதீப்குமார் வெள்ளியன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.