நாமக்கல், மே 5- குமாரபாளையம் அருகே தனியார் பள்ளியில் நீட் தேர்வு எழுத வந்த மாணவ, மாணவிகளின் பெற்றோருக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி கள் செய்து தராததால் பெரும் தவிப்புக் குள்ளாகினர். நாடு முழுவதும் இளநிலை மருத் துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு ஞாயிறன்று நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம், குமார பாளையம் அருகே உள்ள பல்லக்கா பாளையத்தில் செயல்படும் தனியார் இன்டர்நேசனல் மெட்ரிகுலேஷன் பள் ளியில், சுமார் 582 மாணவ, மாணவிகள் ஞாயிறன்று தேர்வு எழுதினர். மாலை 2 மணி முதல் 5 மணி வரை நடைபெற்ற இந்த நுழைவுத் தேர்வை எழுதுவதற்கு சேலம், ஈரோடு, நாமக்கல், கேரளம், திருவண்ணாமலை மற்றும் மதுரை உள் ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ, மாணவிகள் வந்தனர். அவர்க ளுக்கு உறுதுணையாக பெற்றோர்க ளும் வந்துள்ளனர். இந்நிலையில், மாணவ, மாணவிகள் நுழைவு தேர்வு எழுத சென்ற நிலையில், அவர்களுக்கு பாதுகாப்பாக வந்த பெற்றோர்கள் தங் குவதற்கு போதிய நிழல், கழிப்பிடம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி களை பள்ளி நிர்வாகம் செய்து தர வில்லை. கடும் கோடை வெயிலிலும் பெற்றோர்கள் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. போதிய இட வசதிகள் இருந்தும், பள்ளி நிர்வாகம் அஜாக்கிரதையாக செயல்பட்டதால் பெற்றோர்கள் பெரும் அவதிக்குள்ளாகி னர். இதனால் பெற்றோர்கள் கடைக ளுக்கு சென்று தங்களது பணத்தில் பெரிய அளவிலான குடிநீர் கேன்களை கொண்டு சக மாணவர்களின் பெற் றோர்களுக்கு கொடுத்தனர். மேலும், இனி இதுபோன்று நிகழ்வுகள் நடை பெறாத வண்ணம் இருக்க வேண்டும் என வலியுறுத்தினர்.