districts

img

இலவச பல் மருத்துவ பரிசோதனை முகாம்

 பாபநாசம், ஜூலை 31-           பாபநாசம் ரோட்டரிச் சங்கம், மது விலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறை தஞ்சாவூர் இணைந்து நடத்திய இலவச பல் மருத்துவ பரிசோதனை, ஆலோசனை முகாம், மதுபானங்கள், போதைப் பொருட்களினால் ஏற்படும் தீமைகள், தீமை பயக்கும் உணவுகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்  பாபநாசம் அரசினர் ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் நடந்தது.  ரோட்டரி சங்கத் தலைவர் சக்தி வேல் தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் மணியரசன் முன்னிலை வகித்தார். உணவுப் பாதுகாப்பு அலுவலர் மணாழகன், கோட்ட கலால் அலுவலர் அருள் மணி பேசினர். டாக்டர்கள் மோகனப் பிரியா, ஷாகினாஸ் பேகம், சாட்சி ராஜன் 400 மாணவர்களை பரிசோதித்து, ஆலோசனை வழங்கினர். இதில் ரோட்டரி முன்னாள் தலைவர்கள் சரவணன், விவேகானந்தம், சுப்ரமணியன், பொருளாளர் ராமநாதன், சித்திக் உட்பட பங்கேற்றனர்.