தஞ்சாவூர், ஜூலை 28 -
விவசாயிகள் பயன்படுத்தும் இலவச மின்சாரத்துக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை ஒன்றிய-மாநில அரசுகள் கைவிட வேண்டும் என விவசாயிகள் வலி யுறுத்தியுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் செவ்வாய்க்கிழமை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமை வகித் தார்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது: குறுவை தொகுப்புத் திட்டத்தில் விவ சாயிகள் பலரும் தற்போதுதான் பதிவு செய்து வருகின்றனர். சில இடங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் நெல் நடவு செய்தால்தான் சான்றிதழ் தருவதாக கூறுகின்றனர். இம்மா தம் இறுதி வரை நடவுப் பணிகள் நடைபெ றும், எனவே பதிவு செய்வதற்கான அவகா சத்தை ஆக.15 வரை நீட்டிக்க வேண்டும்.
விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கு வதில் பாரபட்சம் காட்டப்படுகிறது. இதில் வெளிப்படை தன்மை இருக்க வேண்டுமா னால், ஆன்லைனில் பதிவு செய்து கடன் வழங்க வேண்டும்.
அப்போதுதான் ஒளிவு மறைவு இல்லாமல் எல்லா விவசாயி களும் கடன் பெற முடியும். பயிர் கடனை உரிய காலத்தில் வழங்க வேண்டும். கடந்த இரு ஆண்டுகளாக தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயிகளின் குழந்தை களுக்கு கல்விக் கடன் வழங்கப்படவில்லை. உடனடியாக கல்விக் கடன் வழங்க மாவட் டத்தில் சிறப்பு முகாம் நடத்திட வேண்டும்.
விவசாயிகள் வேளாண்மை பணிகளுக் கான மின்சாரத்தை போராடி பெற்றுள்ளனர். இந்த மின்சாரத்தை தற்போது தமிழக அரசு இலவசமாக வழங்கி வருகிறது. இலவச மின் சாரத்தை அபகரிக்கும் வகையில் ஒன்றிய அரசும், மாநில அரசும் விவசாயிகளுக்கான மின்சாரத்துக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத் தும் திட்டத்தை கொண்டு வருகிறது. எதிர் காலத்தில் இலவச மின்சாரம் பறிபோகும் என விவசாயிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ள தால், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்.
தமிழக அரசு வீட்டு மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய சிறப்பு முகாம் நடத்துவது போல், விவசாய மின் இணைப்புக்கும் பெயர் மாற்றம் செய்ய சிறப்பு முகாம் நடத்த வேண்டும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் பல இடங்க ளில் குறுவைப் பயிர்கள் போதிய தண்ணீர் இல்லாமல் காய்ந்து வருகிறது. முறைப்பாச னம் இல்லாமல் தண்ணீரை ஆறுகளில் வழங் கினால் மட்டுமே காய்ந்து வரும் பயிரை காப்பாற்ற முடியும். அதே நேரத்தில் கர்நாடக மாநிலத்திடமிருந்து உரிய தண்ணீரை பெற தமிழக அரசு தீவிரம் காட்ட வேண்டும்.
தற்போது மாவட்டங்களில் பல இடங் களில் பனை விதைகள் கிடைக்கின்றன. இந்த விதைகளை சேகரித்து நூறு நாள் வேலைத் திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் சாலை யோரம், நீர்நிலைப் பகுதிகளில் விதைக்க வேண்டும். குறுவையில் பயிர் காப்பீடு திட்டத்தை தமிழக அரசு மூன்றாவது ஆண்டாக கை விட்டுள்ளதை கண்டிக்கிறோம். கடந்த காலங்களில் சம்பா பருவத்தில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இதுவரை இழப்பீடு தொகை ஏதும் வழங்கவில்லை. இதனால் தனியார் காப்பீடு நிறுவனங்கள்தான் லாபம் அடைகின்றன. எனவே தமிழக அரசே காப்பீடு நிறுவனத்தை ஏற்று நடத்த வேண்டும்.
இல்லையென்றால் நெற்பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஏக்க ருக்கு ரூ.8 ஆயிரம் ஊக்கத் தொகை அரசு வழங்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் வலியுறுத்தினர்.