கும்பகோணம், ஜூலை 18-
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம் தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் கிளையின் சார்பாக கல்வி வளர்ச்சி நாள் (காமராசர் பிறந்த நாள்) விழா திருவிடைமருதூரில் நடைபெற்றது.
கிளைத் தலைவர் இலக்கிய தோழன் தலைமை வகித்தார். கிளை துணைத் தலைவர் தா.சொக்கலிங்கம் வர வேற்றார். கிளைச் செயலாளர் கவிமுனி வாழ்த்துரை வழங்கினார். கவிஞர் இளையதீபன் காமராசர் பற்றிய சிறப்பு கவிதை வாசித்தார். மாவட்டச் செயலாளர் ஆர். விஜயகுமார் மாணவர்களுடன் உரையாடினார்.
நிகழ்ச்சியில் பேச்சு, கவிதை, ஓவியம், குரலிசை போட்டிகளில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மாவட்டத் தலைவர் சா.ஜீவ பாரதி நிறைவுரை ஆற்றினார்.