திருவாரூர், மே 19-
பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி உணவு வழங்குவதில் உள்ள குளறுபடிகளை தமிழ்நாடு முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக குடவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றியத் தலைவர் எஸ். கற்பகம் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் கே.பால சுப்ரமணியன், அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் வி.தெட்சிணாமூர்த்தி, மணியம்மை உட்பட பலர் பங்கேற்றனர். குடவாசல் வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
முன்னதாக குடவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வாயில் அருகே தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் 39-ஆவது அமைப்பு தினத்தை முன்னிட்டு ஒன்றியத் தலைவர் எஸ்.கற்பகம் அமைப்பு கொடியை ஏற்றினார்.
கும்பகோணம்
கும்பகோணம் சத்துணவு உழியர் சங்கம் சார்பில் சங்கத்தின் 39-ஆவது அமைப்பு தினம் ஒன்றியத் தலைவர் செந்தாமரை, ஏ.ஆர்.கவிதா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
ஒன்றியச் செயலாளர் யாஸ்மின் வரவேற்றார். மாவட்டப் பொருளாளர் இரா.மதியழகன் சங்க கொடியினை ஏற்றினார். மருந்தாளுநர் சங்க மாநிலப் பொருளாளர் ஏ.விஸ்வேஸ்வரன், அரசு ஊழியர் சங்க கும்பகோணம் வட்ட துணைத் தலைவர் பிரபாகரன், திருவிடைமருதூர் வட்டத் தலைவர் கண்ணன், மாவட்ட மகளிர் குழு அமைப்பாளர் ஜானகி பிரியா ஆகியோர் கலந்துகொண்டனர்.