districts

நெல்லையில் விபத்து அரசு பேருந்து டயரில் சிக்கி ஒருவர் பலி

திருநெல்வேலி, ஆக .23-

    நெல்லையை அடுத்த பேட்டை வி.வி.கே. தெருவை சேர்ந்தவர் வையாபுரி ( 65). பந்தல் போடும் தொழில் செய்து வந்தார். இவர் புதன்கிழமை  காலை வையாபுரி கொண்டா நகரத்தை நோக்கி சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பேட்டை ரெயில்வே கேட் அருகே சென்றபோது சாலையோ ரம் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. இதனால் அவர் லாரியை கடக்க முயன்றபோது அவ்வழியே அரசு பேருந்து ஒன்று வந்தது. அதில் மோதாமல் இருப்பதற்காக வையாபுரி சைக்கிளை இடது பக்கம் திருப்பிய போது லாரி மீது உரசியதில் வையாபுரி நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவர் மீது அரசு பேருந்தின்  பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியது.

    இதில் சம்பவ இடத்திலேயே அவர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.  இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வையாபுரி உடலை மீட்டு உடற் கூறாய்வுக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.