districts

img

நீட் விலக்கு, நம் இலக்கு: திமுக கையெழுத்து இயக்கம்

தஞ்சாவூர், நவ.18-  நீட் விலக்கு, நம் இலக்கு என்னும் நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம், தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ரயிலடியில் நடைபெற்றது.  தஞ்சை தெற்கு மாவட்ட திமுக மருத்துவர் அணி, மாணவர் அணி, இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை, தஞ்சை தெற்கு மாவட்ட திமுக அவைத் தலைவர் சுப.சேகர் தலைமை வகித்து கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர், டாக்டர் வி.சௌந்தர்ராஜன் நீட் விலக்கு அவசியம் குறித்து பேசினார். திமுக ஒன்றியச் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  தொடர்ந்து, குடியரசுத் தலைவருக்கு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி அஞ்சல் அட்டை அனுப்பப்பட்டது.