districts

img

“என் ஓட்டு என் உரிமை” தேர்தல் விழிப்புணர்வு பேரணி

தஞ்சாவூர், ஏப்.2-  நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, வாக்காளர்கள் நேர்மையாக 100 சதவீதம் வாக்களிக்க வேண்டியதை வலியுறுத்தி “என் ஓட்டு என் உரிமை” என்னும் விழிப்புணர்வு பேரணி திங்க ளன்று நடைபெற்றது. தஞ்சாவூர் ரயில் நிலையம் வளா கத்தில் இருந்து துவங்கிய பேரணியை,  மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாக ராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். விழிப்புணர்வு பேரணி, ரயில்  நிலையம் வளாகத்தில் இருந்து ஆத்துப் பாலம் வழியாக காந்திஜி வணிக வளா கம் வரை சுமார் ஆயிரத்திற்கும் மேற் பட்ட மாணவர்களின் பங்களிப்புடன் நடைபெற்றது. மேலும், பொது மக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) விஷ்ணுபிரியா, தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, தஞ்சாவூர் மாநகர காவல் துணை கண்கா ணிப்பாளர் ராஜா மற்றும் பொதுமக்கள்  கலந்து கொண்டனர்.