districts

img

மேலப்பட்டு புதிய நியாய விலைக் கடையை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்

அறந்தாங்கி, ஆக.26 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங் கியை அடுத்த மேலப்பட்டு கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் புதிதாக  கட்டப்பட்ட நியாய விலைக் கடையை தமிழக சுற்றுச்சூழல் துறை மற்றும் காலநிலை மாற்றுத் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்ய நாதன் திறந்து வைத்து விநியோக சேவையை  தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து வன்னியபிள்ளை வயல் பகுதியில், புதிய மெட்டல் சாலை திறப்பு மற்றும் பொதுமக்கள் பயன்படும் வகையில் வன்னியபிள்ளைவயல் கிராமத் திற்கு புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றியை  அமைச்சர் திறந்து வைத்தார். மேலப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர்  என்.அயூப்கான் வரவேற்றார். அறந்தாங்கி  ஒன்றிய பெருந்தலைவர் மகேஸ்வரி சண்முக நாதன் மற்றும் துணைப் பெருந்தலைவர் ஜெயசுதா பொன்கணேசன், ஒன்றிய கவுன்சிலர் வெள்ளைச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.