திருவப்பூர் ரயில்வே மேம்பாலத்தை விரைவில் அமைக்க நடவடிக்கை மதிமுக வேட்பாளர் துரை வைகோ உறுதி
மதிமுக வேட்பாளர் துரை வைகோ உறுதி
திருச்சி மக்களவைத் தொகுதிக்குட் பட்ட புதுக்கோட்டை நகரின் பல்வேறு இடங் களில் மதிமுக வேட்பாளர் துரை.வைகோ சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வியா ழனன்று வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் கூறுகையில், “நான் வெற்றி பெற்றால் உங்களை எளிதில் சந்திக்கக் கூடிய நாடாளுமன்ற உறுப்பி னராக இருப்பேன். புதுக்கோட்டையில் தனியாக எம்.பி., அலுவலகத்தை தொடங்கி மக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பேன். அதி முக வேட்பாளர் பற்றி உங்களுக்குத் தெரியும். அவர் மணல் மாஃபியா கும்பலைச் சேர்ந்தவர். கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றப் பின்னணி உள்ளவர். நான் வெற்றி பெற்று ஓர் ஆண்டி லேயே புதுக்கோட்டையின் முக்கிய பிரச்ச னையாக இருக்கும் திருவப்பூர் ரயில்வே கேட் மேம்பாலப் பணிகளை துவங்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன்” என்றார். வேட்பாளருடன் சட்டத்துறை அமைச் சர் எஸ்.ரகுபதி, சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா, பூமிநாதன், திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் கே.கே.செல்லப் பாண்டியன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், மதிமுக மாவட்டச் செயலா ளர் எஸ்.கே.கலியமூர்த்தி, திமுக நகரச் செய லாளர் ஆ.செந்தில் உள்ளிட்டோர் இருந்தனர்.
புதுக்கோட்டை, ஏப்.4 - முன்னாள் அமைச்சர் சி.விஜய பாஸ்கர் ‘ஜல்லிக்கட்டு நாயகன்’ இல்லை; குவாரியில் அதிக அளவு ஜல்லிக் கற்களை எடுப்பதால் ‘ஜல்லிக் கற்கள் நாயகன்’ என்று சொல்லாம் என மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி விமர் சித்தார். இந்தியா கூட்டணி சார்பில் திருச்சி தொகுதி மதிமுக வேட்பாளர் துரை.வைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்குக் கேட்டு புதுக் கோட்டை நகரின் பல்வேறு இடங்க ளில் வியாழக்கிழமை பிரச்சாரம் நடைபெற்றது. இப்பிரச்சாரத்தில் கலந்து கொண்டு அமைச்சர் எஸ்.ரகுபதி பேசியதாவது: இது மிகவும் முக்கியமான தேர்தல். பத்தாண்டு காலம் நாட்டை சூறையாடிய மோடி அரசை வீட்டுக்கு அனுப்பக் கூடிய தேர்தல். 10 ஆண்டு ஆட்சியில், பத்து பணக்கா ரர்களை மட்டுமே மோடி வளர்த்து வருகிறார். இரண்டு வெள்ளச் சேதத்தை தமிழ்நாடு சந்தித்த போதும், மோடி அரசு ஒரு பைசா கூட நமக்கு வழங்கவில்லை. இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய நிதியை முதல்வர் மு.க. ஸ்டாலின் நிச்சயம் பெற்றுத் தருவார். மதிமுக வேட்பாளர் துரை. வைகோ வெற்றி பெற்றால் உங்களுக்காக உழைப்பார். அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கருப்பையா வெற்றி பெற்றால் மணல் வியாபாரத்திற்காக ஆந்திரா, கர்நாடகா என பல்வேறு மாநிலங் களுக்குச் சென்றுவிடுவார். தனக்கு எதிராக குவாரியைத் தொடங்கி விடு வார் என்பதற்காகவே முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், கருப்பையாவை திருச்சி தொகுதி வேட்பாளராக களம் இறக்கியுள்ளார். ‘ஜல்லிக்கட்டு நாயகன்’ என்று விஜயபாஸ்கரை சொல்கிறார்கள். அவர் ‘ஜல்லிக்கட்டு நாயகன்’ கிடை யாது. குவாரியில் அதிக அளவு கற்களை வெட்டி எடுப்பதால் ‘ஜல்லிக் கற்கள்’ நாயகன் என்று வேண்டுமானால் அழைக்கலாம். அதிமுகவில் பல்வேறு அணிகள் தேர்தலில் போட்டியிட்டு வரு கின்றன. தேர்தலுக்குப் பிறகு அதி முகவே இருக்காது. பாஜகவுடன் இருப்பவர்கள் சந்தர்ப்பவாதிகள். மக்கள் ஆதரவு பெற்ற ஒரே கூட்டணி ‘இந்தியா’ கூட்டணிதான். ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெற்றவுடன் பாஜ கவே இருக்காது. இவ்வாறு அமைச்சர் பேசினார்.