திருத்துறைப்பூண்டி, ஆக.23 - திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி தெற்கு வீதியில் நியாய விலைக் கடைகளில் தரமான பொருட்களை தட்டுப்பா டின்றி வழங்கிட வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. நகரச் செயலாளர் கோதாவரி தலைமை வகித்தார். மாநிலப் பொருளாளர் ஜி.பிரமிளா, மாவட்டத் தலைவர் எஸ்.பவானி, மாவட்டச் செயலாளர் பி.கோமதி ஆகியோர் கண்டன உரையாற்றினர். நகரக் குழு உறுப்பி னர்கள் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக் கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.