புதுக்கோட்டை/திருவாரூர், ஜன.5 - கொரோனா, டெங்கு மற்றும் கொசுப் புழு ஒழிப்புப் பணியாளர் களுக்கு குறைந்தபட்ச கூலி மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வலியுறுத்தி உள்ளாட்சித் துறை தொழிலாளர் சங்கம் (சிஐ டியு) சார்பில் வியாழக்கிழமை மாநி லம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி களில் டெங்கு, கொரோனா, சிக்கன் குனியா, மலேரியா போன்ற நோய்களை ஒழிக்கும் பணிகளில் 300-க்கும் மேற்பட்ட தொழிலா ளர்கள் வேலை செய்து வருகின்ற னர். இவர்களுக்கு, சட்டத்திற்கு எதிராக தொடர் பணி மறுப்பு, பாது காப்பு உபகரணங்கள், குறைந்த பட்ச கூலி வழங்கப்படுவதில்லை. இவர்களுக்கு உடனடியாக குறைந்தபட்ச கூலி மற்றும் பாது காப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வரும் தொழி லாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சுழற்சி முறையை கைவிட்டு தொடர்ச்சியாக பணி வழங்க வேண்டும். அனை வருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும். விபத்து நிவா ரணம் ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு புதுக் கோட்டை மாவட்ட உள்ளாட்சித் துறை தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் என்.ராஜா தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டப் பொதுச் செய லாளர் க.முகமதலிஜின்னா சிறப்பு ரையாற்றினார். சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் எஸ்.யாசின், துணைச் செயலாளர் சி.மாரிக் கண்ணு மற்றும் சங்க நிர்வாகிகள் பேசினர். திருவாரூர் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு டெங்கு கொசு ஒழிப்பு தொழிலா ளர் சங்கத்தின் மாநில துணை ஒருங்கிணைப்பு கௌரவத் தலை வர் எம்.முரளி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.கே. என்.அனிபா, மாவட்ட துணைத் தலைவர் கே.பி.ஜோதி பாசு ஆகியோர் கண்டன உரையாற்றி னர். அமைப்பின் மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் சி.பூபால் ராஜ், மாவட்டச் செயலாளர் ஆர்.கண்ணன், தலைவர் எஸ்.எஸ்.முருகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.