districts

img

திருச்சி அப்போலோ மருத்துவமனையில் உயிர் காக்கும் முதலுதவி பயிற்சி

திருச்சிராப்பள்ளி, மார்ச் 10 - திருச்சி அப்போலோ மருத்துவமனையில் அடிப்படை உயிர் காக்கும் முதலுதவி குறித்த பயிற்சி நடைபெற்றது.  பயிற்சிக்கு மூத்த இதய நோய் சிறப்பு மருத்துவர் காதர் சாஹிப் தலைமை வகித்தார்.  அப்போது அவர் பேசுகையில், “ஒருவருக்கு இதய பாதிப்பு ஏற்படும்போது மூளை மற்றும் பிற முக்கிய உறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் நிறுத்தப்படும். உடனே அவருக்கு சிபிஆர் கொடுக்கப்பட்டால் மூளைச்சாவு அடைவதை தடுக்க முடியும்” என்றார்.  அவசர சிகிச்சை மருத்துவர் ஸ்டீபன் பிரகாஷ் அருள்தாஸ் கூறுகையில், “அடிப்படை உயிர்க் காக்கும் முதலுதவி பயிற்சி சுகாதார நிபுணர்களுக்காக மட்டுமல்ல; சிபிஆர் முறையை எவ்வாறு செய்வது என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இதன் மூலம் இதய பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு முதலுதவி விரைவாக கிடைக்கும். அவர்களின் உயிர் காக்கப்படும்” என்றார். இதில் மருத்துவமனையின் இணை, துணைத் தலைவர் மற்றும் பிரிவு தலைவர் ஜெயராமன், மருத்துவ நிர்வாகி மரு.சிவம், செயல்பாட்டு பொது மேலாளர் சங்கீத், சந்தைப்படுத்துதல் முதன்மை மேலாளர் அனந்த ராமகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.