districts

img

ஆலங்குடியில் ரூ.1.75 கோடியில் நூலகம் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தகவல்

புதுக்கோட்டை, ஜூலை 30-

     புதுக்கோட்டை மாவட் டம் ஆலங்குடியில் நவீன வச திகளுடன் ரூ.1.75 கோடியில்  நூலகம் அமையவுள்ள தாகச் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்ய நாதன் தெரிவித்துள்ளார்.

     புதுக்கோட்டை ஆறா வது புத்தகத்திருவிழாவில் சனிக்கிழமை நடைபெற்ற இரண்டாம் நாள் நிகழ்வில்  கலந்துகொண்டு சிறப்புரை யாற்றிய அவர் மேலும் தெரி வித்தது: கல்வியால், பகுத்  தறிவால் முன்னேறிய மாநி லம் தமிழ்நாடு. அண்ணா நூற்றாண்டையொட்டி சென்  னையில் மிகப்பெரிய நூல கத்தைக் கலைஞர் அமைத் தார். அதே போலக் கலைஞர் நூற்றாண்டையொட்டி மது ரையில் ரூ.250 கோடி செல வில் பிரமாண்டமான நூல கத்தை முதல்வர் மு.க.ஸ்டா லின் திறந்து வைத்துள்ளார். அறிவுச் சமூகத்தைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு என்ப தற்கு இதுவும் ஒரு உதார ணம்.

     மதப்பரப்புரையோடு மருத்துவப்பணியாற்ற வந்த  ஒரு மருத்துவரின் மகள், இந்த நாட்டில் மருத்துவச் சேவையின் தேவையை உணர்ந்தார். அமெரிக்கா சென்று மருத்துவம் படித்து  மீண்டும் இந்தியா திரும்பி னார். இங்கே பிரமாண்ட மான மருத்துவமனை உரு வாக்கி பல்லாயிரக்கணக் கான ஏழைகளுக்கு மருத் துவ வசதி கிடைக்க ஏற்பாடு செய்தார். அதுதான் வேலூ ரில் உள்ள சிஎம்சி மருத்துவ மனை. தனக்காகச் சொத்துச்  சேர்க்காமல் பொதுமக்க ளுக்காகப் பயன்படுத்துபவ ரின் புகழ் என்றென்றும் நிலைத்  திருக்கும்.

   ரஷ்யப் புரட்சியாளர் லெனினை ஒருவர் சுட்டுக்  கொலை செய்ய முயன்று தோற்றுப்போனர். அவ ருக்குத் தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்று மற்றவர்கள் கூறும்போது, லெனில் அவர் கையில் புத்த கத்தைக் கொடுக்கச் சொன் னார். சாதி, மதங்களைக் கடந்து மனிதர்களை நேசிப்  பதற்குத் தரமான புத்தகங்  கள் உதவும். ஒவ்வொரு குழந்தைகளின் கையில் செல்போனைக் கொடுப்ப தைவிடப் புத்தகத்தைக் கொடுக்க வேண்டும்.

    ஆலங்குடி தொகுதியில் ரூ. 1.75 கோடியில் நவீன வசதிகளுடன் நூலகத்தை உருவாக்கும் பணிகளைத் தொடங்கியிருக்கிறோம். அது நூலகமாக மட்டுமல்லா மல், போட்டித் தேர்வை எதிர்  கொள்ளவும், வேலை வாய்ப்புகளை உருவாக்கும் மையமாகவும் விளங்கும் என்றார். நிகழ்ச்சிக்கு ஸ்ரீபாரதி  கல்வி நிறுவனங்களின் தலை வர் குரு.தனசேகரன் தலை மை வகித்தார். ‘சந்திரன் மேல குடிபோகும் காலம்’ என்ற தலைப்பில் புதுதில்லி விஞ்ஞான் பிரச்சாரின் முது நிலை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் உரை யாற்றினார்.

   கவிச்சுடர் கவி தைப்பித்தன் தலைமையில் தஞ்சை இனியன், வல்லம் ராஜூப்பால், அறந்தை வெங்கடேசன், மு.பா, வீ.மா  இளங்கோவன் ஆகியோர் பங்கேற்ற கவியரங்கம் நடை பெற்றது. முன்னதாக அறிவி யல் இயக்க மாவட்டத் தலை வர் ம.வீரமுத்து வரவேற் றார். இணைச் செயலாளர் ஆர்.பிச்சைமுத்து நன்றி கூறினார்.